இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய பங்கு வெளியீடாக எல் ஐ சி இருக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. ஆனால் சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், சந்தையானது கடும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றது. கூடுதலாக ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனையானது இப்போதைக்கு முடிவுக்கு வருமா என்பதும் பெரும் கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது.
ஆக இப்படி பல இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில், வரவிருக்கும் மத்திய ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டு மதிப்பு குறைப்பு
ஆக இதுவும் இந்திய சந்தையில் இருந்து பலத்த முதலீடுகள் வெளியேற வழிவகுக்கலாம். மொத்தத்தில் இந்த நிலையில் இந்திய சந்தையானது தற்போதைக்கு ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்றே பலரும் கணித்து வருகின்றனர். இத்தகைய சூழலுக்கு மத்தியில் தான் எல்ஐசி பங்கு வெளியீட்டு மதிப்பினை மத்திய அரசு கிட்டதட்ட 21,000 கோடி ரூபாயாக குறைத்துள்ளது.
FPO - இருக்கே
இத்தகைய சூழல்களுக்கு மத்தியில் பலருக்கும் இருக்கும் ஒரு கேள்வி. ஐபிஓ (IPO)-வில் பெரியளவில் திரட்ட முடியாவிட்டால் என்ன? அடுத்ததாக FPO-வில் பெரியளவில் நிதி திரட்டிக் கொள்ளலாமே என்ற எண்ணம் எழுந்திருக்கும். ஆனால் இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக தீபம்-மின் (DIPAM) செயலாளர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.
அடுத்த ஓராண்டுக்கு FPO இல்லை
மே மாத தொடக்கத்தில் பங்கு வெளியீடு செய்யப்படவுள்ள நிலையில், இவ்வெளியீட்டினை தொடர்ந்து 1 வருடத்திற்கு உரிமை பங்கு வெளியீடு (FPO) இருக்காது என்று கூறியுள்ளார். ஆக அடுத்த ஒரு வருடத்திற்கு மீண்டும் ஒரு பங்கு விற்பனை இருக்காது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
சில்லறை முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு
எப்படியிருப்பினும் எல்ஐசி ஐபிஓ என்பது சில்லறை முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக எல்ஐசி பாலிசிதாரர்களுக்கும், ஊழியர்களுக்கும் மிக நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. தள்ளுபடி விலையுடன் கிடைக்கும் என்பதால், மற்ற சில்லறை முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் விலையை விட குறைவாகவே இருக்கும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?



Click it and Unblock the Notifications