டெல்லி: இந்தியாவில் கடந்த 10 ஆண்டு காலத்தில் நேரடி வரிவசூல் 182 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது, வரி வசூல் ஆகிய நடைமுறைகள் கடந்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டுள்ளன இதன் விளைவாக வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையும், வரி வசூலும் அதிகரித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி 2023- 24ஆம் நிதியாண்டில் இந்தியாவில் 19.60 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரி வசூலாகியிருக்கிறது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 182 சதவீதம் அதிகமாகும். Time Series Data என்ற பெயரில் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2023 -24 ஆம் நிதியாண்டில் 9.11 லட்சம் கோடி ரூபாய் நிறுவன வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டு காலத்தில் இரட்டிப்பாகியுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது 2014-15இல் நிறுவனங்கள் செலுத்திய வரி 4.29 லட்சம் கோடிகள் தான்.

இதே காலகட்டத்தில் தனிநபர் வருமான வரி வசூல் 4 மடங்காகி 10.45 லட்சம் கோடியாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு முதன்முறையாக பதவியேற்ற 2014 -15 ஆம் நிதி ஆண்டில் நேரடி வரி வசூல் 6.96 லட்சம் கோடியாக இருந்தது.
இதில் நிறுவனங்களின் வரி பங்களிப்பு 4.29 லட்சம் கோடி ரூபாய் ஆகவும், தனி நபர்களின் வருமான வரி பங்களிப்பு 2.66 கோடி ரூபாயகவும் இருந்தது. அதேபோல 2014 - 15 ஆம் ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 4.04 கோடியாக இருந்த நிலையில் 2023-24 ஆம் ஆண்டில் அது 8.61 கோடியாக அதிகரித்துள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 113 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி- இல் நேரடி வரிகளின் பங்களிப்பு 2014 -15 ஆம் ஆண்டில் 5.5 சதவீதமாக இருந்து தற்போது அது 6.64 சதவீதம் என அதிகரித்துள்ளது.
வரி வசூல் அதிகரித்திருப்பது ஒருபுறம் இருந்தாலும் வரி வசூலுக்காக அரசு செய்த செலவினம் கணிசமான அளவு குறைந்துள்ளது. வரி வசூலுக்காக கடந்த நிதியாண்டில் அரசு செய்த செலவினம் 0.44 சதவீதமாக குறைந்து இருக்கிறது. இது 2014 ஆம் ஆண்டில் 0.59 சதவீதமாக இருந்தது.
மின்னணு முறையில் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வது, தானியங்கி வரி செயலாக்க நடைமுறைகள் உள்ளிட்ட வரி நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியதன் காரணமாகவே இந்தியாவில் வரி வசூலும் அதிகரித்து அதற்காக அரசு செய்யும் செலவினமும் குறைந்துள்ளது.
Written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications