வரி வசூல் மற்றும் வருமான வரி தாக்கல் பல மடங்கு உயர்வு.. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மேஜிக்..!

டெல்லி: இந்தியாவில் கடந்த 10 ஆண்டு காலத்தில் நேரடி வரிவசூல் 182 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது, வரி வசூல் ஆகிய நடைமுறைகள் கடந்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டுள்ளன இதன் விளைவாக வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையும், வரி வசூலும் அதிகரித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி 2023- 24ஆம் நிதியாண்டில் இந்தியாவில் 19.60 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரி வசூலாகியிருக்கிறது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 182 சதவீதம் அதிகமாகும். Time Series Data என்ற பெயரில் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2023 -24 ஆம் நிதியாண்டில் 9.11 லட்சம் கோடி ரூபாய் நிறுவன வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டு காலத்தில் இரட்டிப்பாகியுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது 2014-15இல் நிறுவனங்கள் செலுத்திய வரி 4.29 லட்சம் கோடிகள் தான்.

 வரி வசூல் மற்றும் வருமான வரி தாக்கல் பல மடங்கு உயர்வு.. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மேஜிக்..!


இதே காலகட்டத்தில் தனிநபர் வருமான வரி வசூல் 4 மடங்காகி 10.45 லட்சம் கோடியாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு முதன்முறையாக பதவியேற்ற 2014 -15 ஆம் நிதி ஆண்டில் நேரடி வரி வசூல் 6.96 லட்சம் கோடியாக இருந்தது.

இதில் நிறுவனங்களின் வரி பங்களிப்பு 4.29 லட்சம் கோடி ரூபாய் ஆகவும், தனி நபர்களின் வருமான வரி பங்களிப்பு 2.66 கோடி ரூபாயகவும் இருந்தது. அதேபோல 2014 - 15 ஆம் ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 4.04 கோடியாக இருந்த நிலையில் 2023-24 ஆம் ஆண்டில் அது 8.61 கோடியாக அதிகரித்துள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 113 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி- இல் நேரடி வரிகளின் பங்களிப்பு 2014 -15 ஆம் ஆண்டில் 5.5 சதவீதமாக இருந்து தற்போது அது 6.64 சதவீதம் என அதிகரித்துள்ளது.

வரி வசூல் அதிகரித்திருப்பது ஒருபுறம் இருந்தாலும் வரி வசூலுக்காக அரசு செய்த செலவினம் கணிசமான அளவு குறைந்துள்ளது. வரி வசூலுக்காக கடந்த நிதியாண்டில் அரசு செய்த செலவினம் 0.44 சதவீதமாக குறைந்து இருக்கிறது. இது 2014 ஆம் ஆண்டில் 0.59 சதவீதமாக இருந்தது.

மின்னணு முறையில் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வது, தானியங்கி வரி செயலாக்க நடைமுறைகள் உள்ளிட்ட வரி நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியதன் காரணமாகவே இந்தியாவில் வரி வசூலும் அதிகரித்து அதற்காக அரசு செய்யும் செலவினமும் குறைந்துள்ளது.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+