டெல்லி: இந்தியாவில் கடந்த 10 ஆண்டு காலத்தில் நேரடி வரிவசூல் 182 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது, வரி வசூல் ஆகிய நடைமுறைகள் கடந்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டுள்ளன இதன் விளைவாக வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையும், வரி வசூலும் அதிகரித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி 2023- 24ஆம் நிதியாண்டில் இந்தியாவில் 19.60 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரி வசூலாகியிருக்கிறது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 182 சதவீதம் அதிகமாகும். Time Series Data என்ற பெயரில் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2023 -24 ஆம் நிதியாண்டில் 9.11 லட்சம் கோடி ரூபாய் நிறுவன வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டு காலத்தில் இரட்டிப்பாகியுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது 2014-15இல் நிறுவனங்கள் செலுத்திய வரி 4.29 லட்சம் கோடிகள் தான்.

இதே காலகட்டத்தில் தனிநபர் வருமான வரி வசூல் 4 மடங்காகி 10.45 லட்சம் கோடியாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு முதன்முறையாக பதவியேற்ற 2014 -15 ஆம் நிதி ஆண்டில் நேரடி வரி வசூல் 6.96 லட்சம் கோடியாக இருந்தது.
இதில் நிறுவனங்களின் வரி பங்களிப்பு 4.29 லட்சம் கோடி ரூபாய் ஆகவும், தனி நபர்களின் வருமான வரி பங்களிப்பு 2.66 கோடி ரூபாயகவும் இருந்தது. அதேபோல 2014 - 15 ஆம் ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 4.04 கோடியாக இருந்த நிலையில் 2023-24 ஆம் ஆண்டில் அது 8.61 கோடியாக அதிகரித்துள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 113 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி- இல் நேரடி வரிகளின் பங்களிப்பு 2014 -15 ஆம் ஆண்டில் 5.5 சதவீதமாக இருந்து தற்போது அது 6.64 சதவீதம் என அதிகரித்துள்ளது.
வரி வசூல் அதிகரித்திருப்பது ஒருபுறம் இருந்தாலும் வரி வசூலுக்காக அரசு செய்த செலவினம் கணிசமான அளவு குறைந்துள்ளது. வரி வசூலுக்காக கடந்த நிதியாண்டில் அரசு செய்த செலவினம் 0.44 சதவீதமாக குறைந்து இருக்கிறது. இது 2014 ஆம் ஆண்டில் 0.59 சதவீதமாக இருந்தது.
மின்னணு முறையில் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வது, தானியங்கி வரி செயலாக்க நடைமுறைகள் உள்ளிட்ட வரி நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியதன் காரணமாகவே இந்தியாவில் வரி வசூலும் அதிகரித்து அதற்காக அரசு செய்யும் செலவினமும் குறைந்துள்ளது.
Written by: Devika
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications