நேரடி வரி வசூல் 5 சதவீதம் வளர்ச்சி.. 9.45 லட்சம் கோடி ரூபாய்..!

2020-21ஆம் ஆண்டில் நேரடி வரி விதிப்பின் கீழ் மத்திய அரசு சுமார் 9.45 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை வசூல் செய்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் கூறுகிறது. இதுமட்டும் அல்லாமல் வரி வசூல் அளவு 5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பால் நேரடி வரி வசூல் அளவீட்டை மத்திய நிதியமைச்சகம் மறுமதிப்பீடு செய்து இலக்கு நிர்ணயம் செய்த நிலையில் நிர்ணயம் செய்யப்பட்ட 9.05 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி 9.45 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வரியை வசூல் செய்துள்ளது.

 நேரடி வரி வசூல் 5 சதவீதம் வளர்ச்சி.. 9.45 லட்சம் கோடி ரூபாய்..!

இதன் மூலம் வசூல் செய்யப்பட்ட மொத்த 9.45 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரியில், கார்பரேட் வரியாக 4.57 லட்சம் கோடி ரூபாயும், தனிநபர் வருமான வரி மற்றும் பாதுகாப்பு பரிமாற்ற வரிப் பிரிவில் 4.88 லட்சம் கோடி ரூபாய் தொகையை வசூல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் 2020-21ஆம் நிதியாண்டில் மத்திய நிதியமைச்சகம் மொத்தம் 12.06 லட்சம் கோடி ரூபாய் அளவில் வசூல் செய்திருந்த நிலையில், சுமார் 2.61 லட்சம் கோடி ரூபாய் ரிட்டன் தொகையாக அளித்துள்ளது. இதேபோல் 2020ல் மோசமான வர்த்தகம் மற்றும் பொருளாதார நிலையிலும் முன்கூட்டிய வரி சுமார் 4.95 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, இது கடந்த நிதியாண்டை விடவும் 6.7 சதவீதம் அதிகமாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+