இந்தியாவில் டிஜிட்டல் சேவை பிரிவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று பேடிஎம், சமீபத்தில் பங்குச்சந்தை முதலீட்டுச் சேவையை அறிமுகம் செய்து பல லட்சம் வாடிக்கையாளர்களைப் புதிதாகக் கவர்ந்து தனது வர்த்தகத்தை வலிமை சேர்த்தது.
இதன் தொடர்ச்சியாகப் பேடிஎம் இந்திய இளைஞர்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் கேமிங் மீதான ஈர்ப்பை வர்த்தகமாக்க முடிவு செய்து இந்தியாவில் முதல் முறையாக மிகப்பெரிய முதலீட்டில் Paytm First Games என்ற ஆன்லைன் கேமிங் தளத்தை அறிமுகம் செய்துள்ளது.
பேடிஎம் குழுமத்தின் இந்தப் புதிய வர்த்தகப் பிரிவான ஆன்லைன் கேமிங் தளத்திற்குக் கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் பிராண்ட் அம்பாசிடராக அறிவிக்கப்பட்டார். இங்க தான் பிரச்சனை வெடித்துள்ளது.
CAIT அமைப்பு
இந்திய வர்த்தகர்கள் அமைப்பான CAIT (The Confederation of All India Traders) சச்சின் டெண்டுல்கர்-ன் நியமனத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்தியா - சீனா எல்லையில் எப்போதும் இல்லாத வகையில் பதற்றமான சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது, இதுகுறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில் சீன நிறுவனங்களின் முதலீடு பெரிய அளவில் ஆதிக்கம் செய்யும் பேடிஎம் நிறுவனத்திற்கு நாடே போற்றும் ஒரு கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் எப்படி விளம்பர தூதர் பொறுப்பு ஏற்கலாம் எனச் சச்சினுக்கு CAIT கடிதம் எழுதியுள்ளது.
பதவி விலகல்
சச்சின் டெண்டுல்கர் Paytm First Games வர்த்தகத்தின் விளம்பர தூதர் பொறுப்பேற்றுள்ள நிலையில், நாடு மற்றும் நாட்டு மக்களின் மன உணர்வைக் கருத்தில் கொண்டு சீனா உடனான பிரச்சனையை மனதில் வைத்து தனது முடிவை திரும்பப் பெற்று, பிராண்ட் அம்பாசிடர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
பிரவின் கந்தேல்வால்
Paytm First Games வர்த்தகத்தின் விளம்பர தூதர் பதவியே ஏற்கப் பணம் முக்கியக் காரணமாக இருக்காது என நம்புகிறோம், ஆனால் நாடு மற்றும் நாட்டு மக்களின் மன உணர்வைத் தாண்டி நீங்கள் இந்தப் பதவியே ஏற்க என்ன காரணம்..? என CAIT அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் பிரவின் கந்தேல்வால் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது.
அலிபாபா
மேலும் இந்தக் கடிதத்தில் இந்தியச் சீன எல்லையில் சீன ராணுவத்தின் தாக்குதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் இழந்துள்ள வேளையில், சீனாவின் அலிபாபா-வின் மிகப்பெரிய முதலீட்டில் இயங்கும் பேடிஎம் நிறுவனத்தில் பிராண்ட் அம்பாசிடர் ஆக எப்படிப் பொறுப்பேற்க மன வந்தது.
உங்களின் இந்த முடிவு பல கோடி இந்திய மக்களுக்கு அதிர்ச்சியாகவும்,
அருவருப்பாகவும் உள்ளது என CAIT அமைப்பின் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது.
பேடிஎம் பர்ஸ்ட் கேம்ஸ்
ஆன்லைன் கேமிங் பிரிவை மட்டும் தனிப்பட்ட வகையில் கவனம் செலுத்தித் துவங்கப்பட்ட இந்தப் பேடிஎம் பர்ஸ்ட் கேம்ஸ் ஐபிஎல் காலத்தில் மட்டும் சுமார் 1 கோடி வாடிக்கையாளர்களையும், அடுத்த 6 மாதத்தில் 2 கோடி லைவ் ஈவென்ட்ஸ் உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இப்புதிய சேவையின் விளம்பரத்திற்காக மட்டும் பேடிஎம் 300 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications