சில சமயங்களில் நாம் படிக்கும் படிப்பு ஒன்றாகவும் நாம் செய்யக்கூடிய வேலை அதற்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒன்றாகவும் இருக்கும். 12-ம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் பட்டப்படிப்பை தேர்ந்தெடுக்கும் போது ஒரு கனவினை மனதில் வைத்துக் கொண்டுதான் ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவில் பட்டப் படிப்பை தேர்ந்தெடுப்போம்.
ஆனால் அந்த படிப்பை முடித்த பிறகு சிலருக்கு படித்த வேலைக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பலருக்கு அப்படி கிடைக்காது . ஆனால் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தவர்களும் இருக்கிறார்கள். இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் இருக்கும் பலரும் இப்படி வந்து தான் பெரிய அளவில் உயர்ந்து நிற்கிறார்கள்.

சந்திரசேகரன்: இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன். என். சந்திரசேகரன் என அறியப்படும் அவர் தமிழ்நாட்டில் தமிழ் மீடியத்தில் அரசு பள்ளியில் படித்தவர். அவர்தான் தற்போது நாட்டின் மிகப் பெரிய தொழில் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கிறார்.
மோகனூரில் அரசு பள்ளியில் தமிழ் மீடியத்தில் பள்ளி படிப்பை முடித்தார். இதனை அடுத்து கோயம்புத்தூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் அப்ளைடு சயின்ஸ் பட்டப்படிப்பை முடித்த அவர் என்ஐடி திருச்சிராப்பள்ளியில் எம்சிஏ பட்டப்படிப்பை முடித்தார். ஐஐடி போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் எல்லாம் இவர் படிக்கவில்லை தன்னுடைய திறமையாலும் கடின உழைப்பாலும் மட்டுமே தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பு கொண்ட டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.
கிரன் மசூம்தர் ஷா : பெங்களூரு பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பிரிவில் பட்டப்படிப்பை முடித்தார் . இதனை அடுத்து ஆஸ்திரேலியா சென்ற அவர் பெலாரட் கல்லூரியில் Master of brewery படித்து முடித்தார் . தாயகம் திரும்பிய அவர் பயோ டெக்னாலஜி பிரிவில் பயோகான் நிறுவனத்தை தொடங்கினார். அவரது ஸமார்ட்டான முடிவுகள் நாட்டின் முன்னணி நிறுவனமாக பயோகானை வளர்க்க உதவி செய்திருக்கிறது.

சஞ்சீவ் மேத்தா : ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான இவர் சார்ட்டட் அக்கவுண்டண்ட் படிப்பை முடித்தவர். ஹிந்துஸ்தான் யுனிலிவரின் பல்வேறு பிரிவுகளில் படிப்பை முடித்த அவர் பல்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இதனை அடுத்து தான் அவருக்கு ஹிந்துஸ்தான் யுனிலிவர் தலைமை செயல் அதிகாரி பொறுப்பு கிடைத்தது.
உதய் கோடக்: கோடக் மகேந்திரா வங்கியின் தலைமை செயல் அதிகாரியான உதய் கோடக். காமர்ஸ் பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர் பின்னர் ஜம்னலால் பஜாஜ் கல்வி நிறுவனத்தில் மேலாண்மை படிப்பை படித்தார் .1985 ஆம் ஆண்டு 3 லட்சம் ரூபாய் முதலீட்டில் கோடக் மகேந்திரா வங்கியை தொடங்கி தற்போது இந்தியாவின் முன்னணி தனியார் நிதி நிறுவனங்களில் ஒன்றாக அதனை உருவாக்கி இருக்கிறார்.
ராஜேஷ் கோபிநாதன்: டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான இவர் . என்ஐடி திருச்சிராப்பள்ளியில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படித்தார். இதனை அடுத்து மேலாண்மை பிரிவில் பிஜி டிப்ளமோ படிப்பை முடித்தார். தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆகிய இரண்டிலும் நிபுணத்துவம் பெற்றவரான இவர் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தை வழி நடத்தும் வாய்ப்பை பெற்றவர்.
நாம் பெரிய பெரிய கல்வி நிறுவனங்களில் படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று இல்லை, அரசு பள்ளியில் படித்தாலும் சாதாரண பட்டப்படிப்பை முடித்தாலுமே கூட கடின உழைப்பாலும் திறமையாலும் ஸ்மார்ட்டான முடிவுகளாலும் பெரிய இடத்தை அடைய முடியும் என்பதை இவர்களின் வெற்றி உணர்த்துகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications