தீபாவளி பண்டிகைக்கு வெளி மாநிலங்கள், வேறு நகரங்களில் இருப்பவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு வருவதற்குக் கார், பஸ், விமானம் எனப் பல வழிகளில் பயணிக்க முடிவு செய்துள்ளனர்.
விழாக்காலம் என்பதால் அனைத்து தரப்பினரும் சொந்து ஊருக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கும் காரணத்தால் ரயில் கட்டணத்தைத் தவிர அனைத்து போக்குவரத்து கட்டணங்களும் அதிகரித்துள்ளது.
இப்படித் தீபாவளி பண்டிகைக்காக விமானத்தில் டிக்கெட் புக் செய்யச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.
தீபாவளி
பண்டிகை காலத்தில் டிமாண்ட் அதிகமாக இருக்கும் காரணத்தால் அனைத்து போக்குவரத்து நிறுவனங்களும், தங்களது சேவைக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த வகையில் வெளிநாட்டு விமானக் கட்டணத்தைக் காட்டிலும் உள்நாட்டு விமானக் கட்டணம் பெரிய அளவில் அதிகரித்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாட்னா
பாட்னா-விற்கு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து 3 மடங்கு அதிக டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டு உள்ளது. அக்டோபர் 22 ஆம் தேதி டெல்லி டூ பாட்னா செல்ல குறைந்த விலை கட்டணம் 17000 ரூபாய், இதுவே மும்பை டூ பாட்னா 20000 ரூபாய் ஆக உள்ளது.
வெளிநாட்டுப் பயணம்
இதே அக்டோபர் 22 ஆம் தேதி டெல்லியில் இருந்து சார்ஜா செல்ல வெறும் 11000 ரூபாய் மட்டுமே கட்டணம், மேலும் டெல்லி டூ பாங்காக் 10500 ரூபாய், டெல்லி டூ சிங்கப்பூர் 13000 ரூபாய். வெளிநாட்டுப் பயணங்களைக் காட்டிலும் உள்நாட்டு விமானச் சேவை கட்டணம் அதிகமாக உள்ளது, இது விழாக்காலத்திற்காக ஏற்பட்ட டிமாண்ட்-ன் எதிரொலி.
ரயில், பஸ்
மத்திய அரசும், மாநில அரசும் ரயில், பஸ் என அதிகரித்து இருந்தாலும் போதுமானதாக இல்லை. குறிப்பாக நீண்ட தூரம் செல்ல வேண்டும் என நினைப்பவர்கள் ரயிலில் மட்டுமே செல்ல முடியும். இப்படிப் பார்க்கும் போது பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் முன்கூட்டியே புக் செய்யப்பட்டு உள்ளது.
விமான நிறுவனங்கள்
தக்கல் புக் செய்யப் பெரும் போட்டி உள்ளதால் விமான நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தனியார் பஸ் நிறுவனங்களைப் போல விமான நிறுவனங்களும் விலையை அதிகரித்துள்ளது. இது மக்களைக் கடுமையாகப் பாதிக்கிறது.
More From GoodReturns

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications