பொதுவாக விழாக்கால பருவம் என்றாலே பலருக்கும் போனஸ் கிடைக்கும். இதே அரசு ஊழியர்கள் எனில் அரசின் அகவிலைப்படி உயர்த்தினாலே, அது போனஸ் போல கொண்டாடப்படும். அதிலும் விழாக்கால பருவத்தில் இத்தகைய அறிவிப்பு வந்தால் அது போனஸ் தான்.
அந்த வகையில் தற்போது ஹரியானா மாநில ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34%ல் இருந்து 38% ஆக அதிகரித்துள்ளது.
அகவிலைப்படி
இது ஹரியானா அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தினை கொடுத்துள்ளது எனலாம். அரசு ஊழியர்கள் மட்டும் அல்லாது ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இந்த சலுகையானது பொருந்தும் எனலாம். இது ஜூலை 1, 2022 முதல் இந்த அகவிலைப்படி பொருந்தும்.
நிலுவை எப்போது?
இது ஜூலை - செப்டம்பருக்கான காலகட்டத்திற்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகை நவம்பரில் வழங்கப்படும் என்று ஹரியானா அரசின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜூலை 1,2022ல் இருந்து அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசின் 50 லட்சம் ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இதற்காக மத்திய அரசு 12,852 கோடி ரூபாயினை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
எவ்வவளவு?
இந்த அகவிலைப்படி உயர்வானது 34%ல் இருந்து 38% ஆக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 18000 ரூபாய் என்றால், அதன் மூலம் 6840 அகவிலைப்படியினை பெற்றுக் கொண்டிருப்பார்கள்.
இதற்கிடையில் வரவிருக்கும் விழாகால பருவத்தினை ஒட்டி மீண்டும் அதிகரிப்பு இருக்குமா? என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநில அதிகரிப்பு
ஹரியானா மாநிலத்தில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படித் தொகை, அக்டோபர் மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில்தான் உத்தரப் பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34%ல் இருந்து, 38% ஆக உயர்த்தப்பட்டது. இதையடுத்து தற்போது ஹரியானா மாநிலத்திலும் உயர்ந்துள்ளது.
தீபாவளி போனஸ்?
தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக இந்த அறிவிப்பு வந்திருப்பது ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் மற்ற மாநிலங்களிலும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.