தீபாவளி பண்டிகையைக் கொண்டாட நாடு முழுவதும் மக்கள் தயாராகி வரும் வேளையில், இப்பண்டிகை கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில் 4 நாட்கள் தொடர் விடுமுறை உடன் நீண்ட விடுமுறையாகவும் அமைந்துள்ளது. பொதுவாகத் தீபாவளி காலத்தில் நாடு முழுவதும் பெரிய அளவிலான வர்த்தகம் நடக்கும், இதோடு தற்போது 4 நாள் விடுமுறைக் காலமும் வந்துள்ளதால் ஹாஸ்பிடாலிட்டி மற்றும் டிராவல் துறையும் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெறத் தயாராகியுள்ளது.
இவ்விரு முக்கிய காரணத்தால் நாட்டில் அனைத்து துறையிலும் தற்காலிக பணியாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதுகுறித்து குவெஸ் கார்ப், ரேண்ட்ச்டாட், அடெக்கோ, டீம்லீஸ் சர்வீசஸ், மேன்பவர் மற்றும் ஜிகின் டெக்னாலஜீஸ் போன்ற ஸ்டாஃபிங் நிறுவனங்கள் மற்றும் ஆட்சேர்ப்பு போர்டல்கள் கூறுகையில், இந்த வருடத் தீபாவளி பண்டிகை காலத்தில் தற்காலிக ஊழியர்கள் தேவையின் அளவு வருடாந்திர அடிப்படையில் 15-20% அதிகரிப்புடனும், சில துறைகளில் 30-40% வரையிலான அதிகரிப்புடனும் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையின் போது புத்தாடை, பட்டாசு, உணவு பொருட்கள் மட்டும் அல்லாமல் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் முதல் கார், பைக் வரையில் மக்கள் புதிதாக வாங்குவார்கள். இதற்கு ஏற்றார் போல் நிறுவனங்களும் தங்களுடைய தயாரிப்புகளுக்கு அதிகப்படியான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
மறுமுனையில் தீபாவளி பண்டிகை 4 நாட்கள் தொடர் விடுமுறையில் வந்துள்ளதால், இந்த விடுமுறையைப் பயன்படுத்தி நாட்டில் பல கோடி மக்கள் குடும்பத்துடன் உள்நாட்டுச் சுற்றுலா, வெளிநாட்டுச் சுற்றுலா செல்ல துவங்கியுள்ளனர். இதனால் ஹோட்டல், டிராவல், ஹாஸ்பிடாலிட்டி துறையிலும் அதிகப்படியான வர்த்தகம் இந்த தீபாவளி சீசனில் உருவாகியுள்ளது. பொதுவாகத் தீபாவளி பண்டிகையின் போது இந்த 3 துறைக்கும் மந்தமான வர்த்தகம் இருக்கும்.
இதனால் இந்த வருடம் ஒரு நாள் தீபாவளி கொண்டாட்டம் 4 நாளாக மாறியுள்ளது. எனவே மக்கள் அதிகப்படியாகச் செலவு செய்யத் துவங்கியுள்ளனர். இது மட்டும் அல்லாமல் இந்த தீபாவளிக்கு நகரங்கள் மற்றும் கிராமப்புறத்திலும் அதிகப்படியான தொகையை மக்கள் செலவு செய்வார்கள் என கூறப்படுகிறது.
இதேபோல் இந்த ஆண்டு ரீடைல் வர்த்தகத்தைத் தாண்டி ஆன்லைன் வர்த்தகம் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்ற உள்ளதாகக் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் இ-காமர்ஸ், லாகிஸ்டிக்ஸ், குவிக் காமர்ஸ், ரீடைல் விற்பனை, BFSI/NBFC மற்றும் தொலைத்தொடர்புத் துறைகளில் அதிகப்படியான தற்காலிக வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ஸ்டாஃபிங் நிறுவனங்கள் கூறுகிறது.
இதேவேளையில் இந்தியாவில் பல நிறுவனங்கள் இந்த ஆண்டு ஊழியர்களுக்கு அதிகப்படியான போனஸ் தொகையைக் கொடுத்துள்ளது. இதுவும் மக்களின் செலவு செய்யும் அளவீட்டை அதிகரிக்கும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications