இந்திய மக்களின் முக்கிய ஷாப்பிங் இடமாக இருக்கும் டி-மார்ட் ரிடைல் கடைகளின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர் மார்க்கெட்ஸின் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தடாலடியாக உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் டிசம்பர் காலாண்டு முடிவுகள் தான்.
அக்டோபர்-டிசம்பர் 2024 காலாண்டில் நிகர லாபம் ரூ.659.6 கோடியை எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டு அதே காலாண்டில் பதிவான ரூ.623.6 கோடியுடன் ஒப்பிடுகையில் வருடாந்திர அடிப்படையில் 5.8% அதிகமாகும். இதேபோல் டிசம்பர் காலாண்டிற்கான வருவாயும் 14.4% வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்து ரூ.14,444.5 கோடியை எட்டியது.

இந்த சிறப்பான காலாண்டு முடிவுகள் தான் இன்று டி-மார்ட் பங்கு விலை தாறுமாறாக உயர்த்தியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் டிமார்ட்-ன் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குகள் 17 சதவீதம் வரையில் உயர்ந்து அதிகப்பட்சமாக 4165 ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போது 11.45 சதவீதம் உயர்வுடன் 4,035 ரூபாயாக உள்ளது. ஆனாலும் இதன் 52 வார உச்சமான ரூ.5,484.00 க்கு கீழேயே உள்ளது.
டிசம்பர் 31, 2024 நிலவரப்படி அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் ரீடைல் கடைகளின் எண்ணிக்கையை 387 ஆக அதிகரித்தது. மேலும் ரீடைல் கடைகளின் வர்த்தக வளர்ச்சியை கணக்கிடம் ஒரே கடை விற்பனை வளர்ச்சி (SSSG) அளவு 4 சவீதமாக இருக்கும் என கணிக்கிடப்பட்ட நிலையில் 5.5% அளவில் உயர்ந்துள்ளது.
டிமார்ட் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் மூலம் ஏற்பட்ட பங்கு விலை உயர்வு இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பை 2.66 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் பிரோக்கரேஜ் கருத்துக்கள் வேறுபடுகின்றன, டிசம்பர் காலாண்டில் வலுவான வருவாய் வளர்ச்சி சந்தையால் வரவேற்கப்பட்டாலும், பிரோக்கரேஜ் நிறுவனங்கள் கலவையான கருத்துக்களை வெளிப்படுத்தின.
மார்கன் ஸ்டான்லி, டி-மார்ட்டின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருந்தாலும் அதன் வரலாற்று சிறப்பு அம்சமான சராசரி வருவாய் வளர்ச்சி அளவீடான 20 சதவீதத்தை ஒப்பிடுகையில் சற்று குறைவு தான். ஆனால் சந்தை கணிப்புகளை காட்டிலும் 1 சதவீதம் அதிகம் வளர்ச்சி அடைந்துள்ளது, இதேபோல் கடைகளின் விரிவாக்க அளவீடு 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் மார்கன் ஸ்டான்லி அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குகளின் டார்கெட் விலையை 3702 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications