இந்தியாவின் முன்னணி ரீடைல் கடைகளில் ஒன்றான டிமார்ட் தனது வர்த்தகத்தை அடுத்தடுத்து விரிவாக்கம் செய்வதற்காக பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறதுய. இதில் முக்கியமாக இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் வர்த்தக துறையில் டிமார்ட் நிறுவனத்தால் பெரிய அளவில் வெற்றி அடைய முடியாமல் உள்ளது.
இந்தியாவில் அடுத்த தலைமுறை நுகர்வோர் சந்தையை பிடிக்க வேண்டுமென்றால் கட்டாயம் ஈகாமர்ஸ் மற்றும் குவிக் காமர்ஸ் அவசியம். இதை உணர்ந்த டிமார்ட் இப்பிரிவு வர்த்தகத்தை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி டிமார்ட்-ன் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் ஆன்லைன் பிரிவு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இப்பிரிவின் இழப்புகள்.
சமீபத்தில் நடத்த இந்நிறுவனத்தின் பொதுக்கூட்டத்தில் ஆன்லைன் பிரிவு வர்த்தகத்தை நிர்வாகம் செய்யும் Avenue E-Commerce என்னும் கிளை நிறுவனத்திற்கு இந்த 500 கோடி ரூபாய் முதலீட்டிடை சேர்த்து இதுவரையில் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் Avenue E-Commerce நிறுவனம் தான் டிமார்ட் ரெடி சேவையை நிர்வாகம் செய்து வருகிறது. 2026ஆம் நிதியாண்டில் இப்பிரிவின் வருவாய் 17 சதவீதம் அதிகரித்து ரூ.4094 கோடி ரூபாயாக இருந்தாலும் நஷ்டத்தின் அளவு 247 கோடியில் இருந்து 307 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்த 2000 கோடி ரூபாய் முதலீட்டில் இதுவரையில் டிமார்ட் ரெடி சேவை 18 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டாலும் இன்னும் லாபகரமாக மாறவில்லை. இதனால் தற்போது சேவை அளிக்கும் நகரங்கள் எண்ணிக்கையை 11 நகரங்காக சுருக்கியுள்ளது.
இதேபிரிவில் வர்த்தகம் செய்யும் செப்டோ, பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் போன்றவை அதிகளவிலான வர்த்தகத்தையும், வருமானத்தையும் பார்த்து வருகிறது. டிமார்ட் சமீப காலமாக உணவு விற்பனை, மருந்து விற்பனை என பல பிரிவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது டிமார்ட்.
தற்போது டிமார்ட் தனது பார்மசி கடைகளை மும்பை பெரு நகரங்களில் மட்டுமே வைத்து இயங்கி வருகிறது, இக்கடைகளில் தனது மளிகை பொருட்கள் விற்பனை கொடுத்த அதிரடியான சலுகைகளை போலவே 20 சதவீதம் என்ற தள்ளுபடி உடன் வர்த்தகத்தை சோதனை முறையில் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications