சென்னை: அம்பானி நிறுவனத்தை ஆரத்தழுவி பாராட்டி வருகிறார்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள். இதற்கு மிக மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து பெய்த மழை காரணமாக பல்வேறு கிராமங்கள் தனி தீவுகளாக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை இரவு மழை ஆரம்பித்ததும் பிஎஸ்என்எல் உள்ளிட்ட பல்வேறு செல்போன் நெட்வொர்க் சேவைகள் முடங்கி விட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகள் கிராமப்புறங்கள் என்பதால் சென்னை போன்று அண்டை அயலாரை உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை நிலவியது. அப்போது பெரிதும் கை கொடுத்திருக்க வேண்டியது தொலைபேசி மட்டுமே. ஆனால் அதுவும் காலை வாரி விட்டதால் மக்களால் அவசிய தேவைகளுக்கு யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
ஊரில் உள்ளவர்கள் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை வெளியூர்களில் உள்ள அவர்களது குடும்பத்தினரால் அறிய முடியவில்லை. இதுபோன்ற ரொம்ப மோசமான சூழ்நிலைக்கு செல்போன் நெட்வொர்க்குகள் தள்ளிவிட்டன. ஆனால் சின்ன சின்ன கிராமங்களில் கூட மழை தொடங்கியது முதல் இதுவரை, அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் நெட்வொர்க் சேவைகள் கிடைத்து வருகின்றன.
ஊரில் யாரிடமாவது ஜியோ தொலைபேசி நம்பர் இருக்குமானால் அவர்களிடம் சென்று, ஊர்மக்கள் தங்கள் உறவினர்களுக்கு அழைப்பு மேற்கொண்டு பேசுகிறார்கள். இதன் காரணமாக எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் ஜியோ நிறுவனம் வாய்மொழி வாயிலாக புகழப்பட்டு வருகிறது. குறைந்த செலவில் அதிகமான அழைப்புகள் மற்றும் டேட்டாக்களை ஜியோ தருவதோடு மட்டுமல்லாமல் சின்ன சின்ன கிராமங்களில் கூட நெட்வொர்க் கிடைக்கும்படி சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி இருக்கிறார் அம்பானி. இதன் பலனை சாமானிய மக்களும் அனுபவித்த வருகின்றனர்.
அதே நேரம் நிஜமாகவே இந்த வேலையை செய்திருக்க வேண்டிய பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவைகள், மழை தொடங்கியதும் மாயமாகி விட்டது கொடுமை. மத்திய அரசு இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் அவசியம் என்பதை இந்த பெரிய மழை கற்றுத் தந்திருக்கிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications