இந்திய அரசு மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யும் நேரம் மற்றும் நாள் ஆகியவை ஆங்கிலேய காலனித்துவ காலத்திலிருந்து பல மாற்றங்களை கண்டுள்ளன. இன்று அனைவரும் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்து பேசி வரும் வேளையில், ஒரு காலத்தில் இந்திய அரசு மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தது.
1860 முதல் 1998 வரை இந்திய தனது பட்ஜெட் அறிக்கையை பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நேரத்தை தேர்வு செய்ய முக்கியமான காரணம், மாலை 5 மணி என்பது லண்டன் நாடாளுமன்ற வேலை நேரத்துடன் ஒத்துப்போகும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனால் லண்டனில் சட்டமியற்றுபவர்கள் இந்திய பட்ஜெட்டை தங்கள் காலை நேரத்தில் கேட்க முடிந்தது.
1999இல் அப்போதைய நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா இந்த பாரம்பரிய வழக்கத்தை மாற்றினார். பிப்ரவரி 28 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த மாற்றம் இந்திய நிர்வாகம் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களுக்கு அதிக நேரம் அளிக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டது. இதன் பிறகு பட்ஜெட் தாக்கல் நேரம் காலை 11 மணியாக நிரந்தரமானது.
2017இல் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தேதியை பிப்ரவரி இறுதியிலிருந்து பிப்ரவரி 1க்கு மாற்றினார். இதனால் பட்ஜெட் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கும் புதிய நிதியாண்டுக்கு முன்பே அமல்படுத்த முடியும்.
2019இல் நிர்மலா சீதாராமன் பாரம்பரிய பிரீஃப்கேஸுக்கு பதிலாக பாரம்பரிய இந்திய புத்தக கட்டு (பஹி-கதா) அறிமுகப்படுத்தினார். 2021இல் கொரோனா காலத்தில் பட்ஜெட் முழுவதும் காகிதமில்லாமல் (paperless) முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்டது. மொபைல் ஆப் மூலம் பட்ஜெட் ஆவணங்கள் எளிதில் கிடைக்கச் செய்யப்பட்டது.
2026 பட்ஜெட் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்படுவது அரிதான நிகழ்வாகும். இது 1999க்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது முறையாகும்.
இந்திய நிதியமைச்சகம் காலனித்துவ கால நேர அமைப்பிலிருந்து இந்திய தேவைகளுக்கு ஏற்ப பல வகையில் மாறியுள்ளது .
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications