இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. 82 தடங்களுக்கு மேலாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்த ரயில்களுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வந்தே பாரத் ஸ்லீப்பர் எகஸ்பிரஸ் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது.
இதனிடையே மும்பையில் வந்தே பாரத் மெட்ரோ ரயில்களும் சோதனை முறையில் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகல்நேர ரயில்களாகும். வந்தே பாரத் மெட்ரோ ரயில்கள் 200 கி.மீ. தொலைவுக்குள் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கின்றன. இந்த மெட்ரோ ரயில்கள் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும்.

இந்த நிலையில் புல்லட் ரயில்கள் பற்றிய சிந்தனை இந்திய ரயில்வேக்கு வந்துவிட்டது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கனவு வெற்றிகரமாக நிறைவேறிவிட்ட நிலையில் இப்போது புல்லட் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
முதல் புல்லட் ரயில் அகமதாபாத்- மும்பை இடையே இயக்கப்பட உள்ளது. புல்லட் ரயிலுக்கான இருப்புப் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த புல்லட் ரயில்கள் அதற்காக அமைக்கப்படுகின்ற ஹைஸ்பீடு ரியல்வே காரிடரில் மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் டிசைனிலேயே இந்த புல்லட் ரயில்களும் தயாரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. புல்லட் ரயில்களைத் தயாரிப்பது குறித்து 2018 ஆம் ஆண்டில் முடிவெடுக்கப்பட்டது. அப்போது 10 பெட்டிகள் கொண்ட புல்லட் ரயிலைத் தயாரிப்பதற்கு ரூ.389 கோடி
செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இப்போது அதன் செலவு ரூ.480 கோடிகள் ஆகும் எனத் தெரிகிறது.
புல்லட் ரயில்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் பயணிகள் வெகு விரைவாக நகரங்கள் இடையே பயணிக்கும் வசதி உண்டாகும்.
இருந்தாலும் புல்லட் ரயில்கள் செல்வதற்கு ஹைஸ்பீடு ஸ்பெஷல் ரயில் கார்டர்களை அமைக்க வேண்டும் என்பதால் இந்தத் திட்டத்துக்கான செலவு மிக அதிகமாக இருக்கும என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருந்தாலும் புல்லட் ரயில்களை அதிகளவில் இயக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்தி மோடியின் அரசு முனைப்பாக உள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பெருமளவு வெற்றி பெற்றதற்குக் காரணம் அதன் வேகம். எனவே அதிக வேகத்தில் ரயில்களை இயக்கினால் மக்கள் அதிகளவில் பயன்படுத்துவார்கள். ரயில்வேக்கும் அதிக லாபம் கிடைக்கும் என்று இந்திய ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
Story written by: Jayachandran
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!



Click it and Unblock the Notifications