சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23 ஆம் தேதி பெரும் பரபரப்புக்கு மத்தியில் மோடி 3.0 ஆட்சியின் முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பாஜக தலைமையிலான அரசு 3வது முறையாக ஆட்சி அமைக்க முதலும் முக்கிய காரணமாக இருந்தது பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் மற்றும் ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு டிடிபி கட்சிகள் தான். இதற்காக இந்த பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திராவுக்கு மிகப்பெரிய அளவிலான நிதியுதவி, சிறப்பு திட்டங்கள், உள்கட்டமைப்பு திட்டங்கள் என மோடி அரசு அள்ளி வீசியது.
ஆனால் தமிழ்நாட்டுக்கு எவ்விதமான நிதி ஒதுக்கீடும், சிறப்பு திட்டமும் அறிவிக்கவில்லை, சொல்லப்போனால் பட்ஜெட் அறிக்கையில் ஒரு இடத்தில் கூட தமிழ்நாட்டின் பெயர் இடம்பெறவில்லை. இது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாறியது. இந்த நிலையில் மோடி அரசு தமிழ்நாட்டை மறந்துவிட்டு உலகில் பல நாடுகளுக்கு நிதியுதவி அளிக்க ரெடியாகியுள்ளது.

வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருக்கக்கூடிய இந்தியா ஏழை நாடுகளுக்கு மற்றும் வறுமையில் வாடும் நாடுகளுக்கு நிதி உதவிகளை செய்து வருகிறது. அந்த நாடுகளில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் வாயிலாக இந்த தொகை வழங்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு இதற்காக 22,155 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது 2023-24 ஆம் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 18,050 கோடி ரூபாயை விட சற்று அதிகமாகும். 2023 - 24 ஆம் நிதி ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் படி மத்திய அரசு ஏழ்மையில் உள்ள நாடுகளுக்கு என 6,541.79 கோடி ரூபாயை நிதி உதவியாக வழங்கியுள்ளது. இது பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்ட 5,848 கோடி ரூபாயை விட அதிகமாகும்.
இந்த நிலையில் 2024-25ஆம் நிதியாண்டில் வெளிநாடுகளுக்கு நிதி உதவியாக 5,667.56 கோடி ரூபாய் வழங்கப்படும் என மதிப்பீடு செய்துள்ளதாக பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளது. இந்தியா பெரும்பாலும் நமது அண்டை நாடுகளுக்கும் ஆப்ரிக்க நாடுகளுக்கும் தான் நிதியுதவி அளிக்கிறது. அந்த வகையில் எந்தெந்த நாடுகள் இந்தியாவிடம் இருந்து எவ்வளவு தொகையை நிதியுதவியாக பெற உள்ளது என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்தியாவிடம் இருந்து அதிக நிதி உதவி பெறக்கூடிய ஒரு நாடாக பூடான் இருக்கிறது. நடப்பாண்டு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள தகவலின் அடிப்படையில் பூடான் இந்தியாவிடம் இருந்து 2,068.56 கோடி ரூபாயை நிதியுதவியாக பெற இருக்கிறது. இதுவே கடந்த ஆண்டு 2,400 கோடி ரூபாய் நிதி உதவியை பெற்றுள்ளது. பூடானுக்கு அடுத்ததாக இந்த பட்டியலில் இருப்பது நேபாளம். இந்த நாடு இந்தியாவிடம் இருந்து 700 கோடி ரூபாயை நிதி உதவியாக பெற இருக்கிறது.
மாலத்தீவு 400 கோடி ரூபாயை நிதி உதவியாக பெற உள்ளது. மொரிஷியஸ் 370 கோடி ரூபாய், மியான்மர் 240 கோடி ரூபாய், இலங்கை 265 கோடி ரூபாய், ஆப்கானிஸ்தான் 200 கோடி ரூபாய் , ஆப்பிரிக்க நாடுகளுக்கு 200 கோடி ரூபாய் என மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நமது அண்டை நாடான வங்கதேசத்திற்கு 120 கோடி ரூபாயும், செசல்ஸ் நாட்டிற்கு 40 கோடி ரூபாயும் வழங்கப்பட இருப்பதாக மத்திய பட்ஜெட் ஆவணங்கள் கூறுகின்றன.
Story written by: Devika
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications