உலகின் மிக உயரமான கட்டடமான Burj Khalifa ஓனர் யார் தெரியுமா?

துபாய்: துபாய் என்ற உடன் நம் அனைவரின் நினைவுக்கு வருவது பூர்ஜ் கலிஃபா கட்டடம் தான். உலகின் மிக உயர்ந்த கட்டடமாக கருதப்படும் பூர்ஜ் கலிஃபாவின் தனித்துவமான வடிவமைப்பு காண்போர் கண்களை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

துபாய் நிலப்பரப்பில் இப்படி ஒரு வலுவான அதே வேளையில் அழகான ஒரு கட்டடத்தை கட்டுவது என்பது பல்வேறு சவால்களைக் கொண்டது. ஆனால் அதையெல்லாம் கடந்து தற்போது துபாயின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது பூர்ஜ் கலிஃபா.

உலகின் மிக உயரமான கட்டடமான Burj Khalifa ஓனர் யார் தெரியுமா?

துபாய் நகரம் பல்வேறு உயரமான கட்டடங்களுக்கும், நவீன ஐடியாக்களுக்கும் பெயர் போனது. இப்படிப்பட்ட துபாயின் அடையாளம் தான் பூர்ஜ் கலிஃபா. இது ஒரு கட்டடம் என்பதை தாண்டி துபாயின் வளர்ச்சியையும் துபாயின் தனித்துவத்தையும் உலகுக்கு வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு பூர்ஜ் கலிஃபா கட்டடம் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

முதலில் இது பூர்ஜ் துபாய் என அழைக்கப்பட்டது. ஆனால் அபுதாபியின் அதிபர் கலிஃபா பின் சையத் அல் நயானை கௌரவிக்கும் விதமாக இதற்கு பூர்ஜ் கலிஃபா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஏனெனில் துபாய் நிதி சிக்கலில் சிக்கி தவித்த போது அதிலிருந்து மீண்டு வளர்ச்சி பாதைக்கு கொண்டுவர உதவியவர் கலிஃபா பின் சையத் அல் நயான்.

பூர்ஜ் கலிஃபா கட்டுமான 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. 2010ஆம் ஆண்டில் பணிகள் முடிந்து கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

கிட்டத்தட்ட 2716.5 அடி உயரம் கொண்ட இந்த கட்டடம் 163 தளங்களைக் கொண்டுள்ளது. உலகின் உயரமான கட்டடம், உலகின் உயரமான தனித்து நிற்கும் ஒரு கட்டமைப்பு என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

இந்த கட்டடம் முகமது அலாபார் என்பவருக்கு சொந்தமான Emaar Properties என்ற மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமானது. துபாய் மால், துபாய் ஃபவுண்டெயின் உள்ளிட்ட துபாயின் அடையாளங்களை கட்டியது இந்த நிறுவனம்தான்.

Emaar Properties நிறுவனம் மூன்று கட்டுமான நிறுவனங்களை கொண்டு இந்த கட்டட பணிகளை மேற்கொண்டது. தென் கொரியாவை சேர்ந்த Samsung C&T நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த Arabtec நிறுவனம், பெல்ஜியத்தை சேர்ந்த BESIX என்ற நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தான் இதனை கட்டி முடித்தன.

பூர்ஜ் கலிஃபா கட்டடம் நீடித்த நிலைத்தன்மையை மனதில் வைத்து தான் கட்டப்பட்டிருக்கிறது. அதாவது இந்த கட்டடம் கிட்டத்தட்ட ஆண்டுக்கு 15 மில்லியன் கேலன் தண்ணீரை சேகரிக்கிறது. கட்டடத்தில் உள்ள அனைத்து தாவரங்களுக்கும் இந்த நீர் பயன்படுத்தப்படுகிறதாம்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+