பெங்களூரு இந்திராநகரில் உள்ள பிரபலமான தி ராமேஸ்வரம் உணவகத்தில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து தான் தற்போது பேசு பொருளாகியுள்ளது. வைட்ஃபீல்டு பகுதியில் உள்ள தி ராமேஸ்வரம் உணவகத்தில் வெடிவிபத்து ஏற்பட்டு 9 பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வெடிவிபத்து காரணமாக தலைப்பு செய்திகளில் இடம் பிடித்திருக்கும் ராமேஸ்வரம் உணவகம் இதற்கு முன்பும் பேசு பொருளாக இருந்தது. அது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஆண்டுக்கு ரூ.50 கோடி வருமானம்: பெங்களூருவில் பிரபலமாக இருந்து வரும் உணவகங்களில் தி ராமேஸ்வரம் உணவகமும் ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் இந்த உணவகத்தை பற்றி தான் பலரும் விவாதித்து வந்தனர்.
இதற்கு காரணம் இந்த உணவகம் ஈட்டும் வருவாய். சமூக ஊடக பயனாளர் ஒருவர் , தி ராமேஸ்வரம் உணவகத்தின் வீடியோவை வெளியிட்டு அதன் வளர்ச்சி குறித்து பேசினார். அதில் ஒரு மாதத்திற்கு இந்த உணவகம் 4.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது என்றும், ஒரு ஆண்டில் 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ராகவேந்திர ராவ் மற்றும் திவ்யா தம்பதியினர் இணைந்து 2021இல் தி ராமேஸ்வரம் உணவகத்தை பெங்களூரு இந்திராநகரில் திறந்தனர். மறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாமின் நினைவாக அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தை கொண்டு தங்கள் கடைக்கு பெயர் சூட்டினர்.
ராகவேந்திர ராவ் 15 ஆண்டுகளாக உணவு துறையில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர், திவ்யா, ஐஐஎம் அகமதாபாத்தில் முதுகலை பட்டம் பயின்றவர். அதுமட்டுமின்றி சிஏ முடித்துள்ளார். இருவரும் இணைந்து 2021இல் முதல் கடையை திறந்தனர்.
தென்னிந்திய உணவு வகைகளை பாரம்பரியம் மாறாமல் பரிமாறுவதால் இவர்கள் கடையில் எப்போதுமே கூட்டம் தான். காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரை தான் கடை இருக்கும். இங்கு பரிமாறப்படும் நெய் பொடி இட்லி மற்றும் மசாலா தோசை, லெமன் இட்லிக்கு வாடிக்கையாளர்கள் அனைவரும் அடிமை.
இந்த கடையில் ஒரு மாதத்திற்கு 4.5 கோடி வருமானம் மற்றும் ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி சுமார் 200 பேருக்கு இவர்கள் வேலைவாய்ப்பு கொடுத்துள்ளனர்.
விரைவில் பெங்களூருவின் மற்ற பகுதிகள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் கடை திறக்கப்போவதாகவும் புதுப்புது உணவு வகைகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் இந்த தம்பதி கூறி இருந்தது.
அண்மையில் பிரபலமான மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான செஃப் கேரி மிஹான் பெங்களூருக்கு வந்திருந்தார். அப்போது இந்த உணவகத்தில் வந்து தோசை உண்டு அந்த வீடியோவை பதிவிட்டிருந்தார். இது இந்த உணவகத்தை மேலும் பிரபலமடைய வைத்தது.
Story Written by: Devika
More From GoodReturns

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications