குஜராத்: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு குஜராத் மாநிலத்தில் தொடங்கப்பட்ட சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரமான கிப்ட் சிட்டியில் (GIFT CITY - Gujarat International Finance Tec-City) போதிய முதலீட்டை ஈர்க்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி நிதி தொழில்நுட்ப மையமாக இந்த நகரம் மாற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்நகரமே கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நகரம் உருவானதிலிருந்து தற்போது வரை பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்க்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

Tracxn என்ற நிறுவனம் 2024 இன் முதல் காலாண்டில் எந்தெந்த நகரங்கள் பின்டெக் துறையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளன என்பதற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் டாப் 10 இடத்தில் குஜராத் தலைநகரான அகமதாபாத்-ம் இடம்பெறவில்லை, கிப்ட் சிட்டி-யும் இடம்பெறவில்லை.
Tracxn உருவாக்கிய பின்டெக் முதலீட்டு பட்டியலில் பெங்களூரு தான் முதலிடத்தை பிடித்துள்ளது. கிட்டத்தட்ட 247 மில்லியன் டாலர் முதலீட்டை பெங்களூரு பெற்றுள்ளது. மொத்த முதலீட்டில் இது 44% ஆகும்.
அடுத்ததாக மும்பை நகரம் 194 மில்லியன் டாலர் முதலீடு அதாவது 35% முதலீடுகளை ஈர்த்துள்ளது.ஹைதராபாத் 75 மில்லியன் டாலர்கள் முதலீட்டையும், குருகிராம் 19.7 மில்லியன் டாலர் முதலீட்டையும் பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் குஜராத்தை சேர்ந்த ஒரே ஒரு நகரம் தான் இடம்பெற்றுள்ளது. அதாவது சூரத் நகரம் 5 மில்லியன் டாலர்கள் நிதியை மட்டுமே ஈர்த்துள்ளது. இந்தியாவில் நிதி சார்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் முதலீடுகளை பெறுவது குறைந்திருப்பது இந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
அதாவது 2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் ஃபின்டெக் ஸ்டார்ட் அப்கள் 1.3 பில்லியன் டாலர்களை முதலீடாக ஈர்த்த நிலையில், நடப்பு ஆண்டில் அது வெறும் 550 மில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இதுவே 2023 ஆம் ஆண்டு நான்காவது காலாண்டில் 346.7 மில்லியன் டாலர்களாக இருந்தது. ஓராண்டுக்கு முன்பு என பார்க்கும்போது அதாவது 2022ல் இது 537 டாலர்களாக இருந்துள்ளது.
இந்தியா 2027 ஆம் ஆண்டு ஐந்து ட்ரில்லியன் டாலர்கள் ஜிடிபி உடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறக்கூடும் என ஐஎம்எப் கணிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு இந்தியாவின் அண்மை காலமாகவே ஃபின்டெக் நிறுவனங்களுக்கான முதலீடுகள் அதிக அளவில் குவிந்ததே காரணம்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் முதலீடுகளை ஈர்ப்பதில் முதலிடத்தில் இருந்த ஃபின்டெக் நிறுவனங்கள் தற்போது அதில் சரிவை கண்டு வருவது இந்த அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இருந்தாலும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், சாதகமான கொள்கைகள் ஆகியவை ஃபின்டெக் நிறுவனங்களுக்கு சாதகமான சூழலை தருகிறது.
பேங்கிங் டெக்னாலஜி துறை 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 85.8 மில்லியன் டாலர்களை ஈர்த்துள்ளது. இது கடந்த 2023 நான்காவது காலாண்டுடன் ஒப்பிடும்போது 187 சதவீதம் அதிகம் என தெரிய வந்துள்ளது. எனவே வங்கி கட்டமைப்புகளை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு தற்போது தேவை இருப்பதை உணர்த்துவதாக இது இருக்கிறது என Tracxn நிறுவன ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
குஜராத்தின் கிஃப்ட் சிட்டியை பொறுத்தவரை ஃபின் டெக் தலைநகராக மாற இன்னும் காலம் தேவைப்படும் என்றே தெரிகிறது. அதற்கான கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications