உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா கடந்த 4 வருடமாக டிரம்ப் ஆட்சியில் தனது வர்த்தகத்தைச் சந்தையும், டாலர் மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகப் பல மோசமான மற்றும் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தார் முன்னாள் அதிபர் டிரம்ப்.
இதன் படி அமெரிக்காவுடன் அதிக வர்த்தகப் பற்றாக்குறை அதிகமாக இருக்கும் பல நாடுகளின் இறக்குமதி பொருட்கள் மீது அதிகளவிலான வரியை விதித்து, வெளிநாட்டுப் பொருட்களின் வர்த்தகத்தை அமெரிக்காவில் குறைத்தார் டிரம்ப். இந்த முக்கியமான முடிவை எடுக்க முக்கியக் காரணமாக இருந்தது சீனா.
சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் வர்த்தகப் போராட்டத்தில் ஒரு பகுதியாக அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் அமெரிக்கா- இந்தியாவின் நட்புறவுக்கு ஆதாரமாக விளங்கிய GSP தகுதியை நீக்கினார் டிரம்ப்.
மீண்டும் கிடைக்குமா..?
இந்தியாவிற்கான சிறப்பு வர்த்தகத் தகுதியான GSP-ஐ திருப்பிக் கொடுக்க இந்திய அரசு சார்பில் பல முறை கேட்ட பின்பும் டிரம்ப் நிர்வாகம் கொடுக்க மறுத்தது. இதனிடையில் புதிய அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்று உள்ள நிலையில் இந்தியாவிற்கு மீண்டும் ஜிஎஸ்பி தகுதி கிடைக்குமான என்ற கேள்வி எழுந்தது மட்டும் அல்லாமல் இந்திய வர்த்தகச் சந்தைக்கு முக்கியமானதாகவும் விளங்குகிறது.
ஜிஎஸ்பி என்றால் என்ன..?
அமெரிக்காவின் விரும்பத்தக்க வர்த்தகத் திட்டம் தான் இந்த ஜிஎஸ்பி என அழைக்கப்படும் Generalised System of Preferences. இத்த திட்டத்தின் கீழ் தகுதி மற்றும் அனுமதி பெறும் நாடுகள் அமெரிக்காவுடன் பல ஆயிரம் பொருட்களை 0% வரியில் (duty-free entry) வர்த்தகம் செய்யலாம்.
இது அமெரிக்காவுக்கும் மட்டும் அல்லாமல் இந்தத் தகுதி பெறும் நாடுகளின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவை ஜிஎஸ்பி தகுதியில் இருந்து நீக்கியது மட்டும் அல்லாமல் இந்தியா அமெரிக்காவிற்குப் போதுமான அளவிற்குத் தனது சந்தையில் வர்த்தக வாய்ப்புகள் அளிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
ஹார்லி டேவிட்சன்
இதன் பின்பு இந்தியாவில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு மத்திய அரசு வட்டியை உயர்த்தியது. இதில் குறிப்பாக அமெரிக்காவின் முன்னணி பிரண்டான ஹார்லி டேவிட்சன் பைக் மீது மத்திய அரசு 100% வரி விதித்தது.
ஆனால் டிரம்ப்-ன் டிவீட் மற்றும் மோடிக்குச் செய்த போன் கால் மூலம் 50 சதவீத வரியைக் குறைத்தது மத்திய அரசு. இவை அனைத்திற்கும் ஆரம்பக்கட்டமாக அமைந்தது சீனா
சீனா
2019இல் அமெரிக்கா - சீனா இடையே இருந்து 308.8 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கக் கடுமையான வரி விதிப்பு, இறக்குமதி தடை ஆகியவற்றைச் சீன பொருட்கள் மீது விதித்தார். இதனால் இரு நாடுகள் மத்தியில் வர்த்தகப் போர் உருவானது மட்டும் அல்லாமல் இருநாடுகள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.
வர்த்தகம்
டொனால்டு டிரம்ப் சீனா மட்டுமல்லாமல் அமெரிக்காவுடன் எந்த நாடு அதிகளவிலான வர்த்தகப் பற்றாக்குறை வைத்துள்ளதோ அனைத்து நாடுகளுடனும் அதிரடியாக நடவடிக்கை எடுத்தார் டிரம்ப்.
சீனா-வை தொடர்ந்து இந்தியா பக்கம் திரும்பிய டிரம்ப், இந்தியாவிற்கான GSP தகுதியை நீக்கினார்.
28.8 பில்லியன் டாலர்
இந்தியா அமெரிக்கா இடையில் வெறும் 28.8 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகப் பற்றாக்குறை இருந்த நிலையில், பல ஆண்டுகளாக இந்தியா அமெரிக்கா நட்புறவின் அடையாளமாக விளங்கிய Generalised System of Preferences (GSP) தகுதியை நீக்கியது.
ஜோ பிடன்
டிரம்ப் ஆட்சியில் இந்தியாவிற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த இந்த ஜிஎஸ்பி பிரச்சனை இந்தியா - அமெரிக்கா நட்புறவில் பெரிய அளவிலான நம்பிக்கையை வைத்துள்ள ஜோ பிடன் ஆட்சிக்கு வந்துள்ள காரணத்தால் விரைவில் இந்தியாவிற்கு மீண்டும் ஜிஎஸ்பி தகுதி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications