வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து விட்டதால் இந்திய ரயில்வே அதைப் பல வடிவங்களிலும் அறிமுகப்படுத்தி வருகிறது.
ஒரு பகல் நேர எக்ஸ்பிரஸ் ஒரு ஊரில் இருந்து காலையில் கிளம்பி இரவுக்குள் மீண்டும் அதே ஊருக்குத் திரும்பி வரவேண்டும். இதுதான் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் கான்செப்ட். அதன்படி 700 கி.மீ. வரையிலுள்ள நகரங்களுக்கிடையே சதாப்தி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் நீண்ட தொலைவு நகரங்களுக்கு இடையே ராஜதானி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சதாப்தி, ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டுமே அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்களாகும். சதாப்தி பகல் நேர ௐஎக்ஸ்பிரஸ், ராஜதானி இரவு பகல் எக்ஸ்பிரஸ்.
இந்த நிலையில் திடீரென்று அதிநவீன வசதிகள் அமைந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை சதாப்தி வழித்தடத்தில் அறிமுகப்படுத்தியது இந்திய ரயில்வே துறை. இந்த ரயில்களுக்கு மக்கள் ஆதரவு பெருகியதைத் தொடர்ந்து நிறைய தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்களை இந்திய ரயில்வே இயக்கத் தொடங்கி விட்டது.
இந்த நிலையில் 200 கி.மீ. தொலைவுக்கிடையேயான நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் மெட்ரோ ரயில்களை இணைக்க முடிவு செய்து ஜூலை முதல் அந்த சேவை தொடங்குகிறது. இது லோக்கல் ரயில்களுக்குப் போட்டியாகும்.
இப்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது. இதற்கான பெட்டிகள் உருவாக்கப்பட்டு விரைவில் அறிமுகமாக உள்ளன.
இந்த ஸ்லீப்பர் ரயில்கள் ராஜதானி வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.
இந்த நிலையில் சதாப்தி மற்றும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்குப் பதிலாக வந்தே பாரத் மற்றும் வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில்களை இந்திய ரயில்வே இயக்க உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவின் முதல் செமி ஹைஸ்பீடு ரயிலான வந்தே பாரத் சென்னையிலுள்ள இன்டகிரல் கோச் பேக்டரியில் தயாரிக்கப்படுகிறது.
அதி நவீன வசதிகளுடன் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உலகத் தரம் வாய்ந்ததாக உள்ளன. இதனிடையே சதாப்தி ரயில்களையும் ராஜதானி ரயில்களையும் வந்தே பாரத் ரயில்கள் படிப்படியாக மாற்றி விடும் என்று ரயில்வே வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதுகுறித்து ஐசிஎப் பொது மேலாளர் பிஜி மல்லையா கூறுகையில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல வழித்தடங்கள் சதாப்தி ரயிலுக்கானது. இதனால் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாற்றாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள் வரலாம்.
வந்தே பாரத் ரயில்களுக்கான பெட்டிகளை உடனடியாக அதிகளவில் உற்பத்தி செய்ய முடியாது என்பதால் அதுவரை அந்த வழித்தடங்களில் சதாப்தி ரயில்கள் இயக்கப்படும் என்றார்.
Story written by: Jayachandran
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications