திருச்சி: சர்வதேச அளவில் புகழ்பெற்ற டால்பி லெபாரட்டரிஸ் நிறுவனம் இந்தியாவில் ஆறு இடங்களில் டால்பி சினிமா தியேட்டர்களை அமைக்க இருக்கிறது. இதில் ஒரு தியேட்டர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டால்பி லெபாரட்டரிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் டால்பி சினிமாக்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் மக்களுக்கு மிகச்சிறந்த ஒரு சினிமா அனுபவத்தை தர வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம் என டால்பி லேப் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் ஆறு நகரங்களில் எங்களுடைய டால்பி சினிமாக்களை நிறுவ இருக்கிறோம் எனக் கூறியுள்ளது.

புனே, ஐதராபாத் , பெங்களூரு, கொச்சி, உல்லிகல் ஆகிய ஐந்து நகரங்களிலும் தமிழ்நாட்டில் திருச்சியிலும் டால்பி சினிமா நிறுவப்பட இருக்கிறது. திருச்சியில் இருக்கும் எல்ஏ சினிமா தியேட்டரில் டால்பி சினிமா அனுபவத்தை ரசிகர்கள் இனி பெற முடியும். டால்பி சினிமாவை பொறுத்தவரை தியேட்டருக்கு வந்து பெரிய திரையில் படம் பார்க்கும் மக்களுக்கு ஈடு இணையற்ற காட்சி அனுபவத்தை வழங்குவதற்கான நவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.
ஒரு திரைப்படத்தை இயக்குபவர்கள் எப்படி அது மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என விரும்புகிறார்களோ அதுபோன்ற ஈடு இணையற்ற ஒரு காட்சி அனுபவத்தை மக்களுக்கு வழங்கும் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களும் ஒருங்கிணைந்து டால்பி சினிமா செயல்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் திரையில் நாம் காணும் காட்சிகள் மற்றும் படங்கள் நம் கண் முன்னே நேரடியாக அவை நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அது மட்டும் இன்றி ஒலியானது தியேட்டரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நம்மை வந்து சேரும். இந்த இரண்டு விஷயங்களும் இருப்பதால் நீங்கள் தியேட்டரில் அமர்ந்து சினிமாவை பார்க்கும் போது உங்களுக்கு நிஜமாக நடக்கும் சம்பவங்களை பார்ப்பது போன்ற ஒரு உணர்வு கிடைக்கும் என டால்பி சினிமா கூறுகிறது.
இந்திய மக்களின் வாழ்க்கையில் பொழுதுபோக்கு துறை, குறிப்பாக திரைப்படங்கள் முக்கிய பங்கு வகிக்கும் சூழலில் நாங்கள் டால்பின் சினிமாக்களை கொண்டு வருவதில் பெருமை கொள்கிறோம் என இந்த நிறுவனத்தின் துணை தலைவர் தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் திரைப்படங்கள் மீது தீரா காதல் கொண்டவர்கள் அவர்களின் திரை அனுபவத்தை டால்பி சினிமா இன்னும் மேம்படுத்தும் எனக் கூறியிருக்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து தான் டால்பி சினிமா செயல்பட தொடங்கியது. சுமார் 14 நாடுகளில் தற்போது டால்பி சினிமா தன்னுடைய நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் படங்களை திரையிட்டு வருகிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications