மார்ச் 1, இன்று LPG கேஸ் விலை, வங்கிக் கடன் விகிதங்கள், ரயில் போக்குவரத்து, வங்கி விடுமுறைகள், சமூக வலைத்தளங்கள் என அனைத்திற்குமான விதிகள் மாறுகிறது.
இந்தியாவில் மக்கள் தங்கள் அன்றாடம் உபயோகிக்கும் சமையல் எரிவாயு விலை, வங்கி விடுமுறைகள், வீட்டுக் கடன் வட்டி விகிதம், தனிநபர் கடன் வட்டி, பயணிகள் ரயில் பெட்டிகள் கூடுதல் இணைப்புகள், போன்ற அனைத்திற்குமான விதிகளில் மாற்றங்களை அரசு கொண்டு வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே பணவீக்கம், பொருளாதார மந்தநிலையை சமாளிக்க வங்கிக் கடன்கள் மீதான ரெப்போ வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி தொடர்ந்து உயர்த்தியது, அன்றாட நுகர்வுப் பொருட்கள் மீதான விலை வாசி உயர்வும் மக்களை திக்குமுக்காடச் செய்து வருகிறது.
அப்படி மாறுமேயானால் என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம், விலை, வட்டி விகிதங்களில் ஏதேனும் கூடுதல் மாற்றங்கள் உள்ளதா என்பது குறித்து இனி விரிவாகக் காண்போம்.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வு:
பொதுவாக ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி சமையல் எரிவாயு மீதான விலைகளில் மாற்றம் செய்யப்படும். கடந்த மாதம் கேஸ் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
அவ்வகையில் இம்மாதம் LPG எரிவாயுவின் விலையில் இன்று 50 ரூபாயாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் உயர்த்தியுள்ளது. இவ்விலை உயர்வை அடுத்து வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.1103 ஆக இருக்கும் என செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வங்கிக் கடன் வட்டி விகிதம் உயர்வு!
இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கடன்கள் மீதான ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் சுமார் 250 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் மூலம் அனைத்து வங்கிகளும் அதன் MCLR விகிதங்களை உயர்த்தின.
இதனால் மக்களின் வங்கிக் கடன்களுக்கான EMI தொகை உயர உள்ளதால் மார்ச் 1 முதல் சாமானிய மக்கள் கூடுதல் சுமைக்கு உள்ளாவார்கள்.ரிசர்வ் வங்கி அடுத்த நாணய கொள்கை கூட்டத்திலும் வட்டி விகிதங்களை உயர்த்தலாம், இது இன்னும் மக்களின் வாழ்க்கையை சிக்களுக்குள்ளாக்கும்.
சமூக வலைத்தளங்கள்:
இம்மாதம் முதல் யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மீதான விதிகளில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அதன்படி தவறான, அதேசமயம் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்துப் பதிவிட்டால் அதற்கான அபராதங்களை அதன் பயனாளர் மீது விதிக்கப்படும். அதேசமயம் மத உணர்வுகளை தூண்டும் வகையில் இடும் பதிவுகளுக்கு கடுமையான விதிகள் மற்றும் அபராதங்கள் விதிக்கப்படும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
வங்கி விடுமுறை நாட்கள்!
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இரண்டாவது மற்றும் நான்காவது வாரங்களில் பொதுவாக விடுமுறை நாட்கள்தான். அதுபோக ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை அறிவிக்கும். ரிசர்வ் வங்கி அட்டவணையின்படி மார்ச் மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து 6 நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாகும்.
ரயில் அட்டவணை
ஏப்ரல் முதல் நாட்டில் கோடை காலம் ஆரம்பிக்க உள்ளதால், இந்திய ரயில்வேத்துறை ரயில் அட்டவணையில் சில மாற்றங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மக்கள் தினமும் பயணிக்கும் பயணிகள் ரயில் முதல் 5,000 சரக்கு ரயில்கள் முதல் அட்டவணையில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
More From GoodReturns

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தீவிரமடையும் ஈரான் போர்: ஓமன் வளைகுடாவுக்கு போர் கப்பல்களை அனுப்பும் இந்தியா!! அடுத்தது என்ன?

சிலிண்டர் தட்டுப்பாடு: 2 கப்பல்களில் வந்த எல்பிஜி நாட்டின் மொத்த தேவையையும் பூர்த்தி செய்யுமா?

முதல்ல LPG சிலிண்டரை சரண்டர் செய்யவும்.. அரசின் உத்தரவால் அதிர்ச்சி.. யாருக்கெல்லாம் சிக்கல்..?!

LPG தட்டுப்பாடு: 24 மணிநேரம் கெடு.. வந்தது புது ரூல்ஸ்.. அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஒப்புதல்..!!

சிலிண்டர் தட்டுப்பாடு: எவ்வளவு சொல்லியும் மக்கள் கேட்கவில்லை..!

இனி சிலிண்டர் புக் செய்து காத்திருக்க வேண்டாம்!! வந்துவிட்டது LPG ATM..!! 2 நிமிஷத்துல சிலிண்டர்..!!

வதந்தியை நம்பாதீங்க: சிலிண்டர்களுக்கு பற்றாக்குறையே இல்லை! எரிவாயு அமைச்சகம் அதிரடி விளக்கம்?

பாஜக அரசின் தவறான முடிவுகளே LPG சிலிண்டர் பற்றாக்குறைக்கு காரணம்.. மு.க.ஸ்டாலின் அதிரடி..!

மக்களே உஷார்! மார்ச் 31-க்குள் e-KYC முடிப்பது கட்டாயம்? ஆன்லைனில் எப்படி எளிதாக அப்டேட் செய்யலாம்?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?



Click it and Unblock the Notifications