இந்திய பேமெண்ட் சந்தையில் கூகுள் பே, போன் பே ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது, வங்கிகள் தூங்கிக்கொண்டு இருக்கும் வேளையில் கொள்கை வடிவமைப்பாளர்கள் நிதியியல் ஆதார கண்ணோட்டத்தில் இதை கட்டாயம் பார்க்க வேண்டும் என கோட்டாக் மஹிந்திரா வங்கி நிர்வாக இயக்குனர் உதய் கோட்டாக் InFinity Forum கூட்டத்தில் பேசியுள்ளார்.
பேமெண்ட் சந்தை
இந்திய பேமெண்ட் சந்தையில் இந்திய வங்கிகள் மிகவும் பின்தங்கியுள்ளது. யூபிஐ பேமெண்ட் பிரிவிலும் கூகுள் பே மற்றும் வால்மார்ட்-ன் போன்பே சேவைகள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவது மட்டும் அல்லாமல் 85 சதவீத சந்தையை கைப்பற்றியுள்ளது.
கோட்டாக் மஹிந்திரா வங்கி
இது இந்திய வங்கிகள் விழித்துக்கொள்ளும் நேரம், இல்லையெனில் இந்தியாவின் பெரிய அளவிலான வங்கி வர்த்தகம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செல்லும். இந்த பிரச்சனையை நாட்டின் கொள்கை வடிவமைப்பாளர்கள் முக்கியமான பிரச்சனையாக கருதி ஆய்வு செய்ய வேண்டும் என கோட்டாக் மஹிந்திரா வங்கி நிர்வாக இயக்குனர் உதய் கோட்டாக் தெரிவித்துள்ளார்.
வருமானம் இல்லை
இந்த பேமெண்ட் சேவைக்கு வருமானம் இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில் 2 -3 நிறுவனங்கள் மட்டுமே இதில் அதிகப்படியான ஆதிக்கத்தை தெலுத்தி வருகிறது. ஆனால் கன்ஸ்யூமர் பின்டெக் நிறுவனங்கள் நிதித்துறையை தாண்டி மிகப்பெரிய நுகர்வோர் வருமானம் ஈட்டும் வர்த்தக மாடல்களை வைத்துள்ளது என கோட்டாக் மஹிந்திரா வங்கி நிர்வாக இயக்குனர் உதய் கோட்டாக் இக்கூட்டத்தில் பேசினார்.
வங்கி ஒழுங்குமுறை சட்டம்
ஆனால் வங்கி ஒழுங்குமுறை சட்ட பிரிவு 6 கீழ் வங்கிகள் நிதித்துறை அல்லாத சேவைகளை அளிக்க கூடாது என விதி உள்ளது. இது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது, பின்டெக் சேவை நிறுவனங்கள் மத்தியில் எல்லை கோடு போட வேண்டும். இதேவேளையில் இந்திய வங்கிகளுக்கு இதனால் financial stability பெரும் பிரச்சனையாக உள்ளது.