இந்தியாவில் பொதுத்தேர்தல் அதிரடிகள் முடிந்திருக்கும் வேளையில், அமெரிக்காவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஒருபக்கம் ஜோ பைடன், மறுபுறம் டொனால்ட் டிரம்ப் என அமெரிக்க பொதுத் தேர்தல் குறித்த அதிரடிகள் பேச்சுக்கள் அனல் பறக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்திய நேர்காணலில் பேசியது ஒட்டுமொத்த அமெரிக்க மக்களையும், அந்நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்கள், குறிப்பாக இந்தியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டொனால்ட் டிரம்ப் அப்படி என்ன பேசினார்..?

டொனால்ட் டிரம்ப் "ஆல்-இன்" என்று அழைக்கப்படும் வென்சர் கேப்பிடல் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப முதலீட்டாளர்களுடன் ஒரு போட்காஸ்டில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அமெரிக்க கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆட்டோமேட்டிக் முறையில் கிரீன் கார்டுகளை வழங்கும் திட்டத்தைக் குறித்து அறிவித்தார். இது டொனால்டு டிரம்ப்-ன் குடியேற்ற நிலைப்பாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்பட்டு உள்ளதைக் காட்டுகிறது.
டொனால்டு டிரம்ப் கடந்த ஆட்சியில் Buy American and Hire American என்ற கொள்கையின் கீழ் வெளிநாட்டு ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தது மட்டும் அல்லாமல் அமெரிக்க மக்கள் மத்தியில் வெளிநாட்டவர்களாலேயே அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதாகவும் பேசியுள்ளார். ஆனால் தற்போது டொனால்டு டிரம்ப் தனது நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறியுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
டொனால்டு டிரம்ப் இன்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் "நான் என்ன செய்ய விரும்புகிறேன், நான் என்ன செய்வேன் என்றால், நீங்கள் ஒரு கல்லூரியில் பட்டம் பெறுகிறீர்கள் என்றால் உங்கள் டிகிரி-யின் ஒரு பகுதியாக நீங்கள் ஆட்டோமேட்டிங் முறையில் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற கிரீன் கார்டைப் பெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதில் ஜூனியர் கல்லூரிகளும் அடங்கும், பட்டதாரிகளான எவரும் ஒரு கல்லூரிக்கு இரண்டு வருடங்கள் அல்லது நான்கு வருடங்கள் செல்கிறார்கள் எனில் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்பட வேண்டும்" என்றார். இது மட்டும் அல்லாமல் டிரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் நாளில் இதைத் அமலாக்கம் செய்வதாக உறுதியளித்தார்.
டிரம்பின் 2024 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமான விஷயமாக குடியேற்ற விதிகள் உள்ளது. வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு கிரீன் கார்டுகளை வழங்குவது அமெரிக்க குடியேற்ற முறையின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை அளிக்கும். இது புலம்பெயர்ந்த மக்கள் மீதான அவரது விமர்சனத்திற்கு முற்றிலும் மாறுபட்டு உள்ளது வியப்பு அளிப்பதைத் தொடர்ந்து பலருக்கும் ஷாக் கொடுக்கிறது.
டிரம்ப் சொல்வதை மட்டும் செய்துவிட்டால் இதில் அதிகம் பலன் அடைவது இந்தியாவும், இந்தியர்களும் தான். ஏற்கனவே அமெரிக்காவில் அதிகப்படியான இந்தியர்கள் இருக்கின்றனர். அதேபோல் அமெரிக்க கல்லூரிகளில் இருக்கும் அதிக வெளிநாட்டவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம்.
More From GoodReturns

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications