சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்க முயற்சித்தால், பிரிக்ஸ் நாடுகள் மீது 100% வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிக்ஸ் நாடுகள் என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகியவற்றின் கூட்டமைப்பு.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ரெசிப்பரோக்கல் வரிகளை விதிக்கும் கொள்கையில் கையெழுத்திட்ட அதிர்ச்சி இந்திய சந்தையை எப்படியெல்லாம் பாதிக்கும் என தெரியாத நிலையில், இந்தியா உறுப்பினராக இருக்கும் பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். இதுவும் பிரதமர் மோடியை அமெரிக்காவில் வைத்துக்கொண்டு அடுத்த சில மணிநேரத்தில் இருவரும் சந்திக்க உள்ள வேளையில் 2 முக்கிய அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டு உள்ளார்.

பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கு மத்தியிலான வர்த்தகத்திற்கு சொந்தமாக ஒரு நாணயத்தை பயன்படுத்தவும், டாலரை நம்பி செயல்பட கூடாது என்ற முக்கிய இலக்குடன் கடந்த சில வருடங்களாக இயங்கி வந்த நிலையில், டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
ஆனால் உண்மையில் பிரிக்ஸ் நாணயம் என்ற யோசனைக்கு எந்த நாடும் முன்வைக்கவில்லை, பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் தற்போது அந்தந்த நாட்டு வர்த்தகத்திற்கு அதன் தேசிய நாணயங்களைப் பயன்படுத்தி இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதிலேயே கவனம் செலுத்தப்படுகிறது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு பெரும் சக்தியாக மாறி வரும் வேளையில், அமெரிக்க அரசும், அதிபர் டிரம்ப்-ம் தேவையில்லாமல் அச்சுறுத்தியும், மிகைப்படுத்தியும் காட்டுவதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இதையே மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கினார், ஆயினும் டிரம்ப் தொடர்ந்து இதுக்குறித்து பேசி வருகிறது. பிரதமர் மோடி உடன் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்-ம் டிரம்ப்-ஐ சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் நாணயங்களில் வர்த்தகத்தை எளிதாக்குவதன் மூலம் டாலர் வமீதான சார்புநிலையைக் குறைப்பதில் கவனம் செலுத்தியுள்ளன. இந்த அணுகுமுறை, டாலர் சார்ந்த வர்த்தகத்திற்கு மாற்றுகளை ஆராய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இந்திய அதிகாரிகளின் முந்தைய அறிக்கைகளுடன் ஒத்துப்போகிறது.
உலகெங்கிலும் உள்ள நாடுகள் அமெரிக்க டாலர் அடிப்படையிலான நிதிய அமைப்பில் தொடர்ந்து இருக்க வேண்டும் என டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார், இதனால் டாலர் மதிப்பு உயர்ந்தாலும் மற்ற நாணய மதிப்புகள் அதிகளவில் குறைகிறது.
உலகளவில் பல நாடுகள் டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்ற முக்கிய குறிக்கோள் உடன் இயங்கி வரும் வேளையில், ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பின்பு இந்த எண்ணம் பிரிக்ஸ் நாடுகள் மத்தியில் தீவிரம் அடைந்தது. இதனால் டாலரின் ஆதிக்கம் படிப்படிப்படியாக குறைந்து அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு இது பெரும் தலைவலியாக மாற துவங்கியது. இதை தடுக்கவே டிரம்ப் தற்போது அதிரடிகளை கிளப்பி வருகிறார்.
More From GoodReturns

டிரம்புடன் கைகோர்த்த அம்பானி!! ஈரான் போருக்கு மத்தியில் அமைந்த சர்ப்பிரைஸ் கூட்டணி!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications