இந்திய பொருட்களுக்கு 25% வரி.. அதிரடி காட்டும் அமெரிக்க அதிபர்.. அதிர்ச்சியில் பிரதமர் மோடி..!!

இந்தியாவில் இருந்து இயக்குமதியாகும் பொருட்களுக்கு 20% முதல் 25% வரை வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இரு நாடுகளும் விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க முடியாவிட்டால், இந்த வரி அமல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், "இந்தியா 25% கட்டணம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்தார். மேலும், இந்தியாவுக்கு 20% முதல் 25% வரையிலான வரிகள் விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, "ஆம், எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. இந்தியா என் நண்பர்களாக இருந்தாலும் அது நடக்க வேண்டும்" என்று பதிலளித்தார்.

இந்திய பொருட்களுக்கு 25% வரி.. அதிரடி காட்டும் அமெரிக்க அதிபர்.. அதிர்ச்சியில் பிரதமர் மோடி..!!

அமெரிக்கா - இந்தியா இடையே பல மாதங்களாக ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால், இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். இவ்வாறு பல இடங்களில் நடந்த வர்த்தக பேச்சுவார்த்தைகளிலும் இதே கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரியர் பேசுகையில், "இந்தியா தங்கள் சந்தையின் சில பகுதிகளை திறக்க விரும்புகின்றனர். நாங்களும் பேச்சுவார்த்தைகளை தொடர தயாராக இருக்கிறோம். ஆனால், இந்தியாவுடன் இன்னும் சில விவாதங்கள் செய்ய வேண்டும். அவர்கள் எவ்வளவு முயற்சி செய்ய போகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். இரு நாடுகளின் அதிகாரிகள் சில அம்சங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், அதை சரி செய்ய விரும்புகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இந்தாண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பு நல்ல முறையில் முடிவடையும் என்று தெரிவித்திருந்தார். மேலும், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை மிக வேகமாகவும், இரு தரப்பினருக்கும் பயனுள்ளவாறும் நடந்து வருகின்றன. இது, இரு நாடுகளுக்கும் 'வெற்றி-வெற்றி' என்ற நிலையை உருவாக்கும் ஒப்பந்தமாக இருக்கும்" என்று கூறியிருந்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2ஆம் தேதி இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 26% வரி விதித்தார். இது அவர் கூறிய வர்த்தக ஒப்பந்தங்களை உறுதிப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால், அந்த வரிகள் சில நாட்களுக்குப் பிறகு இடைக்காலமாக நிறுத்தப்பட்டன. டிரம்ப், சமீபத்தில் பல நாடுகளுக்கு செய்தது போல், இந்தியாவுக்கு புதிய வரிகள் விதிப்பதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் இன்னும் அனுப்பவில்லை. எனினும், அவர் சமீபத்திய பேச்சுக்கள் இந்தியா அடுத்ததாக வரிகள் சந்திக்க வாய்ப்பு இருப்பதைக் குறிக்கிறது.

கடந்த 2024ஆம் ஆண்டில் அமெரிக்கா இந்தியாவில் இருந்து சுமார் 87.4 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்தது. அதே நேரத்தில், இந்தியா அமெரிக்காவில் இருந்து சுமார் 41.8 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் வாங்கியுள்ளது. இதனால், அமெரிக்காவுக்கு 45.7 பில்லியன் டாலர் வர்த்தகம் உருவானது. அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் மருந்துகள், ஆடைகள், தொலைபேசி மற்றும் சாதனங்கள் போன்றவை அடங்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+