இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கக்கூடிய டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டில் இருந்து அமெரிக்க எல்லையில் முறைகேடாக வருவதை மொத்தமாக தடுப்பதில் குறியாக இருந்தாலும், வெளிநாட்டு மாணவர்கள் வருகையை தடுக்க எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் அடித்துக்கூறுகின்றனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் தேர்வான பிறகு அமெரிக்காவில் படிப்புக்காக வரக்கூடிய இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. ஐடிபி எஜுகேஷன் எனப்படும் தளத்தின் தெற்காசிய பிராந்திய இயக்குனரான பியூஸ் குமார் எக்னாமிக் டைம்ஸ்க்கு அளித்துள்ள பேட்டியில், டிரம்ப்பின் வருகையால் அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறையாது என கூறியுள்ளார். டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டு மாணவர்களை வரவேற்கும் வகையில் தான் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் பேசி இருக்கிறார் என பியூஸ் குமார் கூறுகிறார்.

அமெரிக்கா கல்லூரிகளில் பயின்று பட்டம் பெறும் வெளிநாட்டவர்களுக்கு ஆட்டோமேட்டிக் முறையில் கிரீன் கார்டு பெறுவதற்கான தகுதியை பெற சட்டம் கொண்டுவரப்படும் என என டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார்.
கிரீன் கார்டு என்பது வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியிருக்க வழங்கப்படும் உரிமம் ஆகும். எனவே 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் படிப்புக்காக அமெரிக்கா வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 15 லிருந்து 20% அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என கூறுகிறார்.
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பிரிவுகளில் மேற்படிப்பை படிப்பதற்காக அமெரிக்காவுக்கு பயணம் செய்கின்றனர்.
டிரம்ப் தலைமையிலான அரசு தற்போதைக்கு வரிகளை குறைப்பது, தொழில் தொடங்குவதை எளிமையாக்கும் வகையில் கொள்கைகளை வகுப்பது, அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவது என்பன உள்ளிட்டவற்றில் தான் அதிக கவனம் செலுத்தும் என அடக்கோ நிறுவனத்தின் தலைவர் கார்த்திகேயன் கூறுகிறார்.
இதனால் அமெரிக்காவில் ஐடி, மருத்துவம் மற்றும் உற்பத்தி துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் இது அமெரிக்காவில் சென்று படிக்க நினைக்கும் இந்தியர்களுக்கு உதவியாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் சுமார் பத்து லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் பயில்கிறார்கள் அவர்களில் இரண்டு லட்சம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். டிரம்ப் மீண்டும் அதிபராக தேர்வாகி இருப்பது அங்கே பயிலக்கூடிய இந்திய மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.
சட்ட ரீதியிலான மற்றும் மெரிட் அடிப்படையிலான குடியுரிமை வழங்குவதற்கு டிரம்ப் நிர்வாகம் முன் வரும் எனக் கூறும் நிபுணர்கள் இது அமெரிக்காவில் பயின்று வரும் இந்திய மாணவர்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக கூறவும் சிறந்த முறையில் இருக்கிறது எனவே இந்தியர்களை பாதிக்கும் வகையிலான திட்டங்களை தற்போதைக்கு ட்ரம்ப் கையில் எடுக்க மாட்டார் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications