2022 ஆம் ஆண்டு முடியும் வேளையில் புத்தாண்டு அடியெடுத்து வைக்கும் அனைவரும் பல புதிய இலக்குகள் மற்றும் திட்டங்கள் உடன் நுழைய உள்ள நிலையில், பல துறைகள் பல புதிய மாற்றங்களை எதிர்கொள்ள உள்ளது.
இதனால் அனைத்துத் துறை நிறுவனங்களும் உஷராக ஒவ்வொரு முடிவுகளை எடுத்து வரும் நிலையில் மக்களுக்குப் பணத்தைச் சேமிக்கும் வாய்ப்புகள் பல உருவாகியுள்ளது.
இதில் முக்கியமாகக் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் ஓரேபோன்ற முடிவுகளை எடுக்க உள்ளதால், சாமானிய மக்கள் பணத்தைச் சேமிக்கும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஸ்மார்போன்
ஸ்மார்போன் வாங்க திட்டமிடும் மக்கள் அனைவரும் இந்த இந்தப் புத்தாண்டில் பெரிய தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம். இதற்கு முக்கியமான காரணம் பெரும்பாலான ஸ்மார்ட்போன் பிராண்டுகள் அதிகப்படியான சரக்கு இருப்புகளை வைத்துக்கொண்டு பல மாதங்களாகச் சிக்கித் தவித்து வரும் நிலையில் இதைத் தீர்க்கும் திட்டத்துடன் இறங்கியுள்ளது.
பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்
2023 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் நுழைவு நிலை மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகப்படியான தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளன. எதிர்பார்த்ததை விட மோசமான பண்டிகை கால விற்பனைக்குப் பிறகு ஸ்மார்ட்போன் டிமாண்ட் அளவில் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டு உள்ளது.
முன்னணி பிராண்டுகள்
இதன் மூலம் உலகம் முழுவதும் அனைத்து முன்னணி பிராண்டுகளும் 2023 ஆம் ஆண்டில் இருப்பில் உள்ள ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய முடிவு செய்த நிலையில் தனது அதிகாரப்பூர்வ இணையதளங்கள், ஈகாமர்ஸ், ரீடைல் கடைகளில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகப்படியான தள்ளுபடி வழங்கப்படுகின்றன.
ஸ்மார்ட்போன் தயாரிப்பு
அக்டோபர் முதல் ஸ்மார்ட்போன் தயாரிப்புகள் இன்னும் முழுமையாகத் தயாரிக்கப்பட்டுச் சந்தைக்கு வராமல் தொடர்ந்து பைப்லைனில் சிக்கியிருப்பதால், இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் பிராண்டுகளுக்கு இது மோசமான காலாண்டாக இந்த டிசம்பர் காலாண்டு இருக்கலாம் என்று சந்தை ஆய்வாளர்கள் ஆய்வாளர் கூறுகின்றனர்.
தள்ளுபடி
அதிகச் சரக்குகள் இருப்பதால், சேனல் பார்ட்னர்கள், ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் இரண்டிலும், தற்போதுள்ள சரக்குகளை வேகமாகத் தீர்க்கும் முயற்சியில் அதிகக் கவனத்தைச் செலுத்துவதால் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் ப்ரீமியம் போன்கள் கூட அதிகப்படியான தள்ளுபடி உடன் விற்கப்படலாம்.
புதிய மாடல்கள்
மேலும், பட்ஜெட் பிரிவு ஸ்மார்ட்போன் அதிக இருப்பு இருப்பதால் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய மாடல்களை வெளியிடுவதை அனைத்து முன்னணி பிராண்டுகளும் ஒத்திவைக்க வாய்ப்பு அதிகளமாக உள்ளது. குறிப்பாகச் சீன ஸ்மார்ட்போன் பிரிண்டுகள் தள்ளிப்போட அதிக வாய்ப்பு உள்ளது.
சியோமி, சாம்சங், ரியல்மீ
தற்போது இந்திய சந்தையில் சியோமி, சாம்சங், மற்றும் ரியல்மீ ஆகிய அனைத்தும் இந்தத் தள்ளுபடி விற்பனையில் முந்திக்கொள்ல அந்தந்த நிறுவன அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில், முதன்மையாக அவர்களின் பட்ஜெட் சலுகைகளில் தள்ளுபடிகள் வழங்க துவங்கியுள்ளது.
மேக்ரோ பொருளாதாரப் பிரச்சனை
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சந்தை மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவுண்டர்பாயின்ட் ஆய்வின் படி மேக்ரோ பொருளாதாரப் பிரச்சனை குறையும் என்பதால் ஸ்மார்ட்போன் விற்பனை மேம்படும். 2022 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையில் 5% வீழ்ச்சிக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டில் 175 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications