வாசிங்டன்: ஏன் உலக வங்கி சீனாவுக்கு அதிகம் கடன் கொடுக்கிறது..? சீனாவிடம் நிறைய பணம் இருக்கிறது. அவர்களிடம் பணம் இல்லை என்றாலும் அவர்கள் பணத்தை உருவாக்கிக் கொள்வார்கள். உலக வங்கி சீனாவுக்கு பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என சர்வதேச அரங்கில் தன் கோபத்தை பதிவு செய்து இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் நாடு சீனா. அமெரிக்காவுக்கு அடுத்த படியாக 10 பில்லியன் டாலருக்கு மேல் நாமினல் ஜிடிபி கொண்ட நாடு சீனா தான். சீனாவின் மொத்த நாமினல் ஜிடிபி சுமராக 13.5 ட்ரில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் தான் உலக வங்கியின் மிகப் பெரிய கடன் வாங்கும் வாடிக்கையாளர் நாடு என்பதும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

ஏன் திடீரென அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இப்படி கோபத்தில் கொப்பளிக்கிறார்..? சமீபத்தில் தான், உலக வங்கி, சீனாவுக்கு அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு, ஆண்டு தோறும் 1 - 1.5 பில்லியன் டாலர் குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்க முன் வந்தது. அதுவும் வரும் ஜூன் 2025 வரை கொடுக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் உலக வங்கியினர்.
இந்த விஷயம் தெரிய வந்த பின் தான் நம் டொனால்ட் ட்ரம்ப் கோபத்தில் முகம் சிவக்க, சீனாவிடம் பணம் இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க கருவூல செயலர் ஸ்டீவன் முன்சின்னும், சீனாவுக்கு உலக வங்கி கடன் கொடுப்பதற்கு தன் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்து இருக்கிறார். அதோடு சீனாவை குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கி, மேலே கொண்டு வரமாறும் தன் கருத்தை பதிவு செய்தார்.
அவரைத் தொடர்ந்து, அமெரிக்க செனட் நிதி கமிட்டியின் தலைவர் சார்லஸ் க்ராஸ்லியும், உலக வங்கி, சீனாவுக்கு கடன் கொடுப்பதை விமர்சித்து இருக்கிறார். மனித உரிமைகளை மீறும், பலவீனமான நாடுகளின் மீது ராணுவ ரீதியிலோ அல்லது பொருளாதார ரீதியிலோ ஆதிக்கம் செலுத்தும் சீனாவுக்கு உலக வங்கியில் இருந்து அமெரிக்க வரிப் பணத்தை கடனாகக் கொடுக்கக் கூடாது என தன் எதிர்ப்பைப் பதிவ செய்து இருக்கிறார். இத்தனை நடந்த பிறகும், உலக வங்கி சொன்ன படி, சீனாவுக்கு கடன் கொடுக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications