சென்னை: நீண்ட தூர ரயில் பயணங்களின் போது, குறிப்பாக இரவில் பயணம் செய்யும் போது, சில சமயங்களில் நம்முடைய ஸ்டேஷனில் இறங்குவதற்கு கடினமாக இருக்கும். அதுவும் இரவு நேரங்களில் தனியாக பயணம் செய்பவராக இருந்தால், தூக்கத்தில் இருந்து கண் விழித்து குறிப்பிட்ட ஸ்டேஷனில் இறங்குவதற்கு சிரமப்படுவார்கள். இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில், பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே துறை சிறந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவே "டெஸ்டினேஷன் அலர்ட்" (Destination Alert) எனப்படும் சேவை.
பயணிகள் வசதியாக பயணம் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால், இந்திய ரயில்வே பல மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் பிடித்தமான சீட்டை தேர்வு செய்வது, உணவு ஆர்டர் செய்வது போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக "Wake Up Call" என்ற சேவையையும் தற்போது வழங்குகிறது.

இரவு நேரங்களில் குறிப்பாக 11 மணி முதல் பயணம் செய்பவர்களுக்கு, இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். இதன்படி பயணிகள் அவர்களுடைய ஸ்டேஷனுக்கு வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு, உங்களுக்கு ஒரு அழைப்பு அல்லது SMS வரும்.
டெஸ்டினேஷன் அலர்ட் சேவையை எவ்வாறு பெறுவது?
Interactive Voice Response (IVR): டெஸ்டினேஷன் அலர்ட் சேவையை பெறுவதற்கு உங்கள் மொபைல் போனிலிருந்து 139 என்ற ஹெல்ப்லைன் நம்பருக்கு அழைப்பு விடுங்கள். அதன்பின் உங்களுடைய மொழியைத் தேர்வு செய்யுங்கள். இப்போது IVR மெனுவில், டெஸ்டினேஷன் அலர்ட் ஆப்ஷனுக்காக "7" என்ற நம்பரைத் தேர்ந்தெடுங்கள். அதன் பிறகு "2" என்ற நம்பரை அழுத்தவும். உங்களுடைய டிக்கெட்டில் உள்ள PNR நம்பரை என்டர் செய்து "1" -ஐ அழுத்தவும்.
இவ்வாறு செய்தால், உங்கள் மொபைல் எண்ணிற்கு டெஸ்டினேஷன் அலர்ட் அமைக்கப்படும். மேலும் உறுதிப்படுத்தும் வகையில் உங்களுக்கு ஒரு SMS அனுப்பப்படும்.
SMS: உங்கள் டிக்கெட்டில் உள்ள 10 இலக்க PNR நம்பரை "ALERT" என்ற வார்த்தையுடன் சேர்த்து 139 என்ற எண்ணிற்கு SMS அனுப்புங்கள். எடுத்துக்காட்டுக்கு, உங்கள் PNR எண் 1234566890 என்றால், "ALERT 1234566890" என்று 139க்கு SMS அனுப்புங்கள்.
இனி நீங்கள் உங்கள் ஸ்டேஷனை விட்டு வேறு ஒரு ஸ்டேஷனில் இறங்காமல் இருக்க முடியும். அதே போல, இந்த அழைப்பு நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது எந்த நம்பரை பயன்படுத்தினீர்களோ.. அந்த நம்பருக்கு தான் வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த பாதுகாப்பு வசதியை பயன்படுத்தி, நீங்கள் தூங்கினால் மற்ற ஸ்டேஷன்களில் சென்று இறங்கி விடுவோம் என்ற கவலை உங்களுக்கு இல்லை. உங்களுக்கு அழைப்பு வந்தவுடன் நீங்கள் எழுந்தால் போதுமானது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications