நாட்டின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ். இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் மருந்து துறையில் புதிய வணிக பிரிவுகளில காலடி வைத்துள்ளது. அண்மையில் டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் நிறுவனம் ஊட்டச்சத்து மருந்துகள் (நெஸ்லேவுடன் கூட்டு வணிகம்) மற்றும் டிஜிட்டல் சிகிச்சை முறைகளில் நுழைந்தது, மேலும் பல தயாரிப்புகளை அறிமுகம் செய்தது.
இந்த புதிய வணிக நடவடிக்கையை சிறப்பாக கொண்டு செல்ல, கடந்த ஆண்டுகளில் அதிகளவில் பணியாளர்களை நியமனம் செய்தது. டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் நிறுவனத்தின் இந்த புதிய வணிகம் எதிர்பார்த்தப்படி சிறப்பாக செயல்படவில்லை என்றால், நிறுவனம் தனது பணியாளர்களை குறைக்க வேண்டியது இருக்கும் ஆய்வாளர் ஒருவர் அப்போதே தெரிவித்து இருந்தார் என தகவல்.

இந்நிலையில், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் நிறுவனம் தனது பணியாளர்களின் செலவை கிட்டத்தட்ட 25 சதவீதம் குறைக்கும் நோக்கில், கணிசமான ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறவனத்தின் ஒருங்கிணைந்த பணியாளர்கள் செலவினம் ரூ.1,367 கோடியாக உள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டில் அறிவிக்கப்பட்ட பணியாளர்கள் செலவினமாக ரூ.1,276 கோடியை காட்டிலும் சுமார் 7 சதவீதம் அதிகமாகும்.
பணியாளர் செலவினம் அதிகரித்துள்ளது என்பது ஒரு புறம் இருந்தாலும், புதிய வணிக முயற்சி சிறப்பாக செயல்படவில்லை என்பதால்தான் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் நிறுவனம் எடுத்துள்ளது என கூறப்படுகிறது. காதும் காதும் வைத்தது போல் நிறுவனத்தின் பல மூத்த அதிகாரிகளை ராஜினாமா செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இதில் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் பல ஊழியர்களும் அடங்குவர் என கூறப்படுகிறது.
நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர் அண்ட் டி) பிரிவில் பணிபுரியும் 50-55 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது. பல்வேறு துறைகளில் அதிக சம்பளம் வாங்கும் பல நபர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் நிறுவனத்தின் சிகிச்சை பிரிவு முழுவதுமாக மூடப்படலாம். அதே நேரத்தில் ஊட்டச்சத்து மருந்து பிரிவில் சில ஆட்குறைப்புகள் நடக்கலாம். இதன் விளைவாக 300-400 பேர் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் நிறுவன பணியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
More From GoodReturns

எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications