ஐதராபாத்: இந்தியா தயாரித்த முதல் உயர் ஆற்றல் கொண்ட லேசர் அடிப்படையிலான ஆயுதம் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டிருக்கிறது.
எதிரி நாட்டு போர் டிரோன்களை தாக்கி செயலிழக்க செய்யும் திறன் கொண்ட லேசர் அடிப்படையிலான directed energy weapon (DEW) என்ற ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. இதன் மூலம் லேசர் ஆயுதங்களை கொண்டிருக்க கூடிய ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.

இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ 30 கிலோ வாட் லேசர் அடிப்படையான ஆயுதத்தை உருவாக்கியது. 360 டிகிரியில் சுழலும் எலக்ட்ரோ ஆப்டிக்கல் சென்சார்கள் கொண்ட இந்த லேசர் ஆயுதம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டதாகவும் இது இலக்கினை சரியாக தாக்கியதாகவும் டிஆர்டிஓ வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த லேசர் ஆயுதமானது ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் வரும் எதிரி நாட்டு டிரோன்கள் உள்ளிட்டவற்றை நடுவானிலேயே துல்லியமாக தாக்குதல் நடத்தி அளிக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த லேசர் ஆயுதத்தை தரையில் இருந்தும் போர் கப்பல்களில் இருந்தும் ஏவ முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஆர்டிஓ தலைவர் சமிர் வி காமத், ஸ்டார் வார்ஸ் தொழில்நுட்பங்களில் தற்போது டிஆர்டிஓ பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் அதில் ஒரு பகுதி தான் இந்த லேசர் ஆயுதம் என்றும் கூறியிருக்கிறார். இது தவிர சூர்யா என்ற பெயரில் 300 கிலோ வாட் லேசர் ஆயுதத்தை டிஆர்டிஓ தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சூர்யா என்ற லேசர் ஆயுதம் 20 கிலோ மீட்டர் தொலைவில் வரும் எதிரி நாட்டு போர் விமானங்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள டிஆர்டிஓவின் உயர் ஆற்றல் அமைப்புகள் மற்றும் அறிவியல் மையம் தான் இந்த லேசர் ஆயுதத்தை உருவாக்கியிருக்கிறது.
ஆந்திராவின் கர்னூல் பகுதியில் வைத்து இதனை சோதனை செய்துள்ளனர். அப்போது வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த இந்த லேசர் ஆயுதம் தொலைதூரத்தில் பறக்க விடப்பட்ட டிரோன்களை துல்லியமாகக் கண்டறிந்து லேசர் ஒளியை செலுத்தி செயலிழக்கச் செய்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளிடம் மட்டுமே இருக்கக்கூடிய இந்த தொழில்நுட்பம் தற்போது இந்தியாவிலும் பரிசோதிக்கப்பட்டு வெற்றி அடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இது வெறும் ஆரம்பம் தான் என்றும், வரும் நாட்களில் இந்த தொழில்நுட்பம் அடுத்தகட்ட பாய்ச்சலை நோக்கி நகரும் என்றும் டிஆர்டிஓ தலைவர் சமிர் வி காமத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications