எப்படியாவது ஒரு வீட்டை வாங்கவேண்டும் என்ற என்ற கனவும், அதற்கான போராட்டமும் தான் இன்றைய நடைமுறையில் உள்ள ஒவ்வொருவரின் கனவாக உள்ளது. அதற்காக, உழைப்பதும், அமைதியான சுற்றுப்புறமும்தான் ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தின் மிகப்பெரிய கனவுகள். ஆனால், 45 வயதான ஐடி ஊழியர் முரளி கோவிந்தராஜு என்பவரின் தியாகத்துடன் செங்கல் செங்கலாகக் கட்டிய கனவு இல்லம், அவரது மரணத்திற்குக் காரணமாக அமைந்துவிட்டது.
கசப்பான அக்கம் பக்க சண்டை, மீண்டும் மீண்டும் வந்த நகராட்சி அறிவிப்புகள் மற்றும் தன்னால் கொடுக்க முடியாது என்று அவர் கூறிய ரூ.20 லட்சம் மிரட்டிப் பணம் பறிக்கும் கோரிக்கை ஆகியவற்றுக்கு இடையே சிக்கிய முரளி, நேற்று காலை தனது கட்டுமானத்தில் உள்ள வீட்டிற்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

மரணம் குறித்த பரபரப்பு தகவல்கள்: பெங்களூருவின் வைட்ஃபீல்டில் உள்ள ப்ரூக்பாங் லேஅவுட்டில் வசித்து வந்த முரளி, ஐடிபிஎல்லில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நல்லூரஹள்ளியில் உள்ள தனது புதிய வீட்டில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு மனைவியும், இரண்டு மைனர் மகள்களும் உள்ளனர்.
10 பக்க மரணக் குறிப்பு: அவர் எழுதி வைத்திருந்த 10 பக்க மரணக் குறிப்பில், தனது பக்கத்து வீட்டாராலும், சில நகராட்சி அதிகாரிகளாலும் தான் தாங்க முடியாத அளவிற்குத் துன்புறுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அவர் தற்கொலை செய்துகொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவர் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் (GBA) அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டியிருந்தது.
இதனையடுத்து, போலீசார், மரணக் குறிப்பின் அடிப்படையில், பக்கத்த் வீட்டுக்காரர்களான சசி நம்பியார் (64) மற்றும் அவரது மனைவி உஷா (57) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களது மகன் வருண் தலைமறைவாக உள்ளார். கைது செய்யப்பட்ட தம்பதியினருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மிரட்டலும் மன அழுத்தமும்: முரளியின் மரணக் குறிப்பும், காவல்துறை விசாரணையும், அவரது வீடு கட்டுவது தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வந்த தகராறைச் சுட்டிக்காட்டுகின்றன.
நிலம் வாங்கியது: முரளி 2018 ஆம் ஆண்டு நம்பியார்களின் உறவினரிடமிருந்து 40x60 சதுர அடி நிலத்தை வாங்கினார். கட்டுமானம் தொடங்கிய உடனேயே பிரச்சினைகள் தொடங்கின.
ரூ.20 லட்சம் கோரிக்கை: முரளியின் தாய் லட்சுமி கோவிந்தராஜு (61) அளித்த புகாரில், தனது மகனுக்கு எதிராகப் புகார் அளிப்பதை நிறுத்த சசி மற்றும் உஷா ஆகியோர் ரூ.20 லட்சம் கேட்டதாகக் கூறியுள்ளார். பணம் கொடுக்க மறுத்த பிறகு, அவர்கள் முரளியைத் தொடர்ந்து மிரட்டியதாகவும், சித்திரவதை செய்ததாகவும் புலனாய்வாளர்களிடம் தெரிவித்தார்.
அழுத்தத்தை ஏற்படுத்திய அதிகாரிகள்: முரளி பணம் கொடுக்க மறுத்த பிறகு, உஷா பலமுறை BBMP அதிகாரிகளை அணுகியதாகவும், இதனால் கட்டுமான இடத்தில் அடிக்கடி ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும் லட்சுமி குற்றம் சாட்டினார். தொடர்ச்சியான GBA அறிவிப்புகளும், சட்ட அழுத்தமும் முரளியை கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இனி தாங்க முடியாது' என்ற மரணக் குறிப்பு: முரளியின் மரணக் குறிப்பில், பக்கத்து வீட்டாரின் துன்புறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. அந்த அழுத்தம் தன்னைப் மனரீதியாகவும், நிதி ரீதியாகவும் உடைத்துவிட்டது என்று அவர் எழுதியிருந்தார்.
புதன்கிழமை காலை 6 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய முரளி, சசியும் உஷாவும் தன்னை சித்திரவதை செய்வதாக தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் அவர் கட்டிடம் கட்டும் இடத்திற்குச் சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 108 (தற்கொலைக்குத் தூண்டுதல்) மற்றும் 308 (பணம் பறித்தல்) ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பலமுறை புகார்: நம்பியர்கள் 2018 முதல் பல புகார்களை அளித்துள்ளனர், இதனால் முரளி பிபிஎம்பி அலுவலகங்கள், காவல் நிலையம் மற்றும் உள்ளூர் நீதிமன்றங்களுக்கு பலமுறை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிறருக்கும் தொல்லை: உள்ளூர்வாசிகள் இப்போது இதேபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். பல வீடுகள் இதேபோன்ற துன்புறுத்தலை எதிர்கொண்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் என்று அந்த அதிகாரி கூறினார்.அழுத்தம், துன்புறுத்தல் மற்றும் உடைந்த அமைப்புகள் ஒரு சாதாரண வாழ்க்கையை எவ்வாறு நசுக்கக்கூடும் என்பதற்கான மற்றொரு மோசமான நினைவூட்டலாக இந்தத் துயரச் சம்பவம் பெங்களூருவுக்கு உள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications