ஐடி முதல் ப்ளூ காலர் ஜாப் வரையில் துபாயில் வேலைவாய்ப்புகள் கொடிக்கிடக்கும் வேளையில், தமிழ்நாட்டு மக்கள் விரும்பி செல்லும் இடமாக உள்ளது. இந்த நிலையில் துபாய் அரசு புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கு பணி அனுமதி (work permit) வழங்குவதற்கான பிராசஸிங் நேரத்தை 30 நாட்களில் இருந்து ஐந்தாக குறைக்கும் வகையில் துபாய் அரசாங்கம் 'வொர்க் பண்டில்' டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக, பணி அனுமதிகள் அதாவது வொர்க் பர்மிட் மற்றும் குடியிருப்பு விசாக்கள் (residency visa) பெறுவதற்கு 30 நாட்கள் வரை ஆகும். இதற்காக 16 ஆவணங்கள் கொண்ட ஒரு பெரிய கட்டு கொண்ட பேப்பர் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
'வொர்க் பண்டில்' டிஜிட்டல் தளம் மூலம் இதற்கான நேரத்தை வெறும் ஐந்து நாட்களாக குறைப்பதன் மூலமும் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஐந்து ஆவணங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. கூடுதலாக, விண்ணப்பதாரரின் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்தும்.
இதேபோல் விசா மையங்களுக்கு நேரில் ஆஜராகுவதற்கான எண்ணிக்கை ஏழிலிருந்து இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஒர்க் பண்டில் இயங்குதளமானது நாட்டில் வசிப்பிட மற்றும் வேலைக்கான அனுமதிகள் நடைமுறைகளை எளிதாக்கும், எளிமையாக்கும்.
அதுமட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள், அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு இந்த வேகமான மற்றும் எளிய அமைப்பு மூலம் கணிசமான சேமிப்புகளையும் கொடுக்கிறது என்று துபாயின் ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்தார்.
இந்த வொர்க் பண்டில் டிஜிட்டல் தளம் துபாயில் வேலை வாய்ப்புகளைத் தேடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (மொஹ்ரே), அடையாளத்துக்கான பெடரல் ஆணையம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு (ICP), துபாய் சுகாதார ஆணையம் (DHA), மற்றும் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை, மற்றும் வதிவிடப் பொது இயக்குநரகம், வெளிநாட்டு விவகாரங்கள் (GDRFA) ஆகியவற்றை வேலை தொகுப்பு ஒருங்கிணைக்கும்.
Story Written by: I.Jayachandran
More From GoodReturns

துபாயில் இருக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ஏர்போர்ட் புறப்படும் முன் இதை செய்ய வேண்டும்!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

துபாய் வாழ் இந்தியர்களுக்கு வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி பதிவு செய்ய சொல்கிறதா இந்திய தூதரகம்? உண்மை என்ன?

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications