சாலையில் குப்பை கொட்டுபவர்களை வீடியோ எடுத்து கொடுத்தால் ரொக்கப் பரிசு- மாநகராட்சி அதிரடி!!

இந்திய நகரங்களுக்கு எல்லாம் உள்கட்டமைப்பு, போக்குவரத்து உள்ளிட்டவை மட்டும் பிரச்சினையாக இல்லை நகரை தூய்மையாக வைத்து பராமரிப்பதும் பெரிய சவாலாக தான் உள்ளது. இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரம் , சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூருவில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் வெளி நாட்டவர்களும் என ஏராளமானவர்கள் வந்து தங்கி இருக்கின்றனர்.

பெங்களூரு நகரை தூய்மையாக வைத்துக் கொள்வது என்பது பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. பெங்களூருவில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடு தேடி வந்து குப்பைகளை பெற்று செல்கின்றனர் . இருந்தாலும் பொதுமக்களில் ஒரு சிலர் குப்பைகளை குப்பை தொட்டியிலும் கொட்டுவது கிடையாது, வீடு தேடிவரும் தூய்மை பணியாளரிடம் ஒப்படைப்பதும் கிடையாது.

சாலையில் குப்பை கொட்டுபவர்களை வீடியோ எடுத்து கொடுத்தால் ரொக்கப் பரிசு- மாநகராட்சி அதிரடி!!

ஒரு கவரில் போட்டு வைத்துக்கொண்டு போகிற போக்கில் அப்படியே தெருக்களில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் நகரின் தூய்மையே கேள்விக்குறியாகி விடுகிறது. எனவே தான் பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் நகரின் தூய்மை தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது . பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் தெருக்களில் குப்பை கொட்டியவர்களை கண்டுபிடித்து அவர்களின் வீட்டின் முன்பு அந்த குப்பைகளை கொண்டு சென்று கொட்டி நூதன தண்டனை வழங்கியது.

இந்த சூழலில் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை அமைப்பு ஒரு தனித்துவமான திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. அதாவது பொதுமக்களில் யாரேனும் தெருக்களில் குப்பைகளை கொட்டுவதையோ வீசிவிட்டு செல்வதையோ வீடியோவாக எடுத்து பகிரக்கூடிய நபர்களுக்கு 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் இது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வர இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி குறிப்பிடுகிறது.

சாலையில் குப்பை கொட்டுபவர்களை வீடியோ எடுத்து கொடுத்தால் ரொக்கப் பரிசு- மாநகராட்சி அதிரடி!!

இதற்காகவே பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் ஒரு செயலியை உருவாக்கி வருகிறதாம், அதுவரை மக்கள் வாட்ஸ் அப்பில் வீடியோவை பகிரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் நகரில் நீங்கள் யாரேனும் தெருக்களில் குப்பைகளை கொட்டுவதையோ அல்லது வீசிவிட்டு செல்வதையோ பார்த்தீர்கள் என்றால் உடனடியாக உங்களுடைய போனில் வீடியோ எடுத்து 9448197197 என்ற whatsapp எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம்.

இந்த வீடியோவில் குப்பை கொட்டக்கூடிய அந்த நபரின் முகம் தெளிவாகவும் , அது எந்த ஏரியா என்பதும் தெளிவாகத் தெரிய வேண்டும் . இந்த வீடியோவை அதிகாரிகள் ஆய்வு செய்து மார்ஷல்களை அனுப்பி வீடியோ எடுக்கப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்தி குப்பை கொட்டியது உண்மைதானா என உறுதிப்படுத்துவார்கள். இதன் பின்னர் வீடியோ எடுத்து தந்த நபருக்கு 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும். குப்பையை கொட்டிய நபருக்கு 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சம்பந்தபட்ட பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் குறிப்பிட்ட அந்த நபரின் புகைப்படத்தை வழங்கி விடுவார்கள், காவல்துறையினர் முதல் முறை தவறு செய்பவர்களிடம் 1000 ரூபாயும் இரண்டாவது முறை தவறு செய்பவர்களிடம் 2000 ரூபாயும் அபராதமாக வசூல் செய்வார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+