இந்திய நகரங்களுக்கு எல்லாம் உள்கட்டமைப்பு, போக்குவரத்து உள்ளிட்டவை மட்டும் பிரச்சினையாக இல்லை நகரை தூய்மையாக வைத்து பராமரிப்பதும் பெரிய சவாலாக தான் உள்ளது. இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரம் , சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூருவில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் வெளி நாட்டவர்களும் என ஏராளமானவர்கள் வந்து தங்கி இருக்கின்றனர்.
பெங்களூரு நகரை தூய்மையாக வைத்துக் கொள்வது என்பது பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. பெங்களூருவில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடு தேடி வந்து குப்பைகளை பெற்று செல்கின்றனர் . இருந்தாலும் பொதுமக்களில் ஒரு சிலர் குப்பைகளை குப்பை தொட்டியிலும் கொட்டுவது கிடையாது, வீடு தேடிவரும் தூய்மை பணியாளரிடம் ஒப்படைப்பதும் கிடையாது.

ஒரு கவரில் போட்டு வைத்துக்கொண்டு போகிற போக்கில் அப்படியே தெருக்களில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் நகரின் தூய்மையே கேள்விக்குறியாகி விடுகிறது. எனவே தான் பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் நகரின் தூய்மை தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது . பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் தெருக்களில் குப்பை கொட்டியவர்களை கண்டுபிடித்து அவர்களின் வீட்டின் முன்பு அந்த குப்பைகளை கொண்டு சென்று கொட்டி நூதன தண்டனை வழங்கியது.
இந்த சூழலில் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை அமைப்பு ஒரு தனித்துவமான திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. அதாவது பொதுமக்களில் யாரேனும் தெருக்களில் குப்பைகளை கொட்டுவதையோ வீசிவிட்டு செல்வதையோ வீடியோவாக எடுத்து பகிரக்கூடிய நபர்களுக்கு 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் இது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வர இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி குறிப்பிடுகிறது.

இதற்காகவே பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் ஒரு செயலியை உருவாக்கி வருகிறதாம், அதுவரை மக்கள் வாட்ஸ் அப்பில் வீடியோவை பகிரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் நகரில் நீங்கள் யாரேனும் தெருக்களில் குப்பைகளை கொட்டுவதையோ அல்லது வீசிவிட்டு செல்வதையோ பார்த்தீர்கள் என்றால் உடனடியாக உங்களுடைய போனில் வீடியோ எடுத்து 9448197197 என்ற whatsapp எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம்.
இந்த வீடியோவில் குப்பை கொட்டக்கூடிய அந்த நபரின் முகம் தெளிவாகவும் , அது எந்த ஏரியா என்பதும் தெளிவாகத் தெரிய வேண்டும் . இந்த வீடியோவை அதிகாரிகள் ஆய்வு செய்து மார்ஷல்களை அனுப்பி வீடியோ எடுக்கப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்தி குப்பை கொட்டியது உண்மைதானா என உறுதிப்படுத்துவார்கள். இதன் பின்னர் வீடியோ எடுத்து தந்த நபருக்கு 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும். குப்பையை கொட்டிய நபருக்கு 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சம்பந்தபட்ட பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் குறிப்பிட்ட அந்த நபரின் புகைப்படத்தை வழங்கி விடுவார்கள், காவல்துறையினர் முதல் முறை தவறு செய்பவர்களிடம் 1000 ரூபாயும் இரண்டாவது முறை தவறு செய்பவர்களிடம் 2000 ரூபாயும் அபராதமாக வசூல் செய்வார்கள்.
More From GoodReturns

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications