இன்று பல டிஜிட்டல் சேவைகளிலும், பணப் பரிமாற்ற சேவைகளிலும் மொபைல் வேலெட் பயன்படுத்தப்படுவது வழக்கமாக உள்ளது, குறிப்பாக மொபைல் ரீசார்ஜ், ஆன்லைன் டாக்ஸி புக்கிங், ஆன்லைன் பேமெண்ட் சேவை ஆகியவற்றில் மொபைல் வேலெட் உள்ளது.
இந்த மொபைல் வேலெட்களை ரிசர்வ் வங்கி ஒரு நிலையான வங்கி கணக்குகளாக மாற்ற முடிவு செய்து இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. ஆர்பிஐ-யின் இந்த முடிவின் மூலம் அனைத்து ப்ரீபெய்டு இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்-ம் இனி வங்கி கணக்குகளைப் போல் வர்த்தகம் செய்யவும், சேவை அளிக்கவும் முடியும்.
எளிதாகப் பணப் பரிமாற்றம்
இதன் மூலம் ஒரு வாடிக்கையாளர் மொபைல் வேலெட்-ல் இருந்து பணத்தை வங்கிகளுக்கு அனுப்ப முடியும், இதுமட்டும் அல்லாமல் ஒரு மொபைல் வேலெட்-ல் இருந்து பிற நிறுவனத்தின் மொபைல் வேலெட்-களுக்கும் பணம் அனுப்ப முடியும். இதுநாள் வரையில் இப்படியொரு சேவைகள் மொபைல் வேலெட்-ல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெபாசிட் அளவு இரட்டிப்பு
இதேபோல் மொபைல் வேலெட், ப்ரீபெய்டு கார்டு போன்ற ப்ரீபெய்டு இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்-க்கு இதுவரை 1 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே பேலென்ஸ் வைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இதன் அளவீட்டை 2 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தியது.
RTGS மற்றும் NEFT பரிமாற்ற முறை
மேலும் இந்த மொபைல் வேலெட்-கள் மூலம் பேமெண்ட் செய்யவும், பேமெண்ட் பெறவும் அனைத்து ப்ரீபெய்டு இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்-க்கும் வங்கி துறையில் பணப் பரிவர்த்தனைக்காகப் பயன்படுத்தும் RTGS மற்றும் NEFT முறையைப் பயன்படுத்த ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
ஏடிஎம், POS இயந்திரம்
இதேபோல் மக்கள் மொபைல் வேலெட்-ஐ வைத்து ஏடிஎம்களில் பணத்தை வித்டிரா செய்யவும் முடியும், இதேபோல் பாயின்ட் ஆப் சேல்ஸ் இயந்திரத்தில் பணத்தைச் செலுத்தவும் முடியும் வரையில் மாற்றங்கள் கொண்டு வர ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
வங்கி கணக்குகள் தேவை
இப்புதிய அறிவிப்புகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்தால் மாணவர்கள், குழந்தைகளுக்கு வங்கிகளில் கணக்கைத் திறக்க வேண்டிய அவசியம் இருக்காது. அனைத்து தேவைகளும் இந்த மொபைல் வேலெட் பூர்த்தி செய்யும், இதேபோல் சிறு தொகையை மட்டுமே பணப் பரிமாற்றம் செய்வோருக்கும் இந்த மொபைல் வேலெட்களை வைத்தே நிர்வாகம் செய்ய முடியும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications