நியூயார்க், அமெரிக்கா: ஐநா பொது சபையின் 80ஆவது பொதுக்குழு கூட்டம் நியூயார்க்கில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. ஐநா உறுப்பு நாடுகள் சார்பாக அந்தந்த நாட்டின் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஐநா பொது சபையில் உரையாற்றிய வண்ணம் இருக்கின்றனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட இந்த கூட்டத்தில் உரையாடியதை பார்த்தோம். இந்தியா சார்பாக இந்த ஆண்டு பிறந்த நரேந்திர மோடி பங்கேற்கவில்லை . பிரதமர் மோடிக்கு பதிலாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐநா பொது குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது எல்லை தாண்டிய பயங்கரவாதம் , வரி வர்த்தகம் என பல்வேறு விஷயங்களை குறிப்பிட்ட ஜெயசங்கர் , பாகிஸ்தானை கடுமையாக சாடினார்.

சுதந்திரம் அடைந்தது முதலே இந்தியா பயங்கரவாதம் எனும் சவாலை எதிர்கொண்டு வருகிறது. உலக பயங்கரவாதத்தின் மையமான ஒரு நாட்டை தான் நாங்கள் எங்களுடைய அண்டை நாடாக கொண்டிருக்கிறோம். கடந்த பல தசாப்தங்களாகவே நடக்கும் சர்வதேச பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள் அனைவருமே அந்த ஒரு நாட்டை சேர்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள் . ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து நடந்த பயங்கரவாத தாக்குதலும் இதற்கு உதாரணம் என குறிப்பிட்டு இருந்தார்.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார் . பயங்கரவாதத்தை தங்களின் கொள்கையாகக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு எதிராக அனைத்து சர்வதேச நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என அப்போது அவர் வலியுறுத்தினார். பயங்கரவாத செயல்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் நிதி உதவி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என ஜெய்சங்கர் குறிப்பிட்டார். அதாவது நிரந்தர மற்றும் நிரந்தரமில்லாத உறுப்பினர்கள் எண்ணிக்கையை விரிவுபடுத்த வேண்டும் என கூறிய அவர் இந்தியா பெரிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறது என தெரிவித்தார் . ஐநா பொது சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் வேண்டும் என்பதை அவர் மறைமுகமாக வலியுறுத்தினார்.
உலகம் முழுவதும் தற்போது நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், திடீரென விதிக்கப்படும் வரி விதிப்புகள் உள்ளிட்டவை வர்த்தக நடைமுறைகளை நிலையற்றதாக மாற்றியிருக்கின்றன என சுட்டிக்காட்டிய அவர் சர்வதேச சமூகம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனக் கூறினார். இந்த நவீன உலகிற்கு இந்தியா மூன்று விதமான அணுகுமுறைகளை கொண்டிருக்கிறது என குறிப்பிட்ட ஜெய்சங்கர் முதலில் சுயசார்பு, சுயபாதுகாப்பு, சுய நம்பிக்கை ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு இந்தியா செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications