இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி காரணமாக மக்கள் எப்படியாவது கூடுதல் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள காரணத்தால் புதுப் புது ஐடியா உடன் சைட்பிஸ்னஸ் துவங்க ஆர்வமாக உள்ளனர்.
சினிமா நடிகர்கள் முதல் ஐடி ஊழியர்கள் வரையில் தங்களது கரியர் நிரந்தரமாக இல்லை என நினைக்கும் காரணத்தால் கூடுதல் வருமானம் அளிக்கும் சைட் பிஸ்னஸ் வைத்துக்கொள்ள அதிகளவில் விரும்புகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பார்க்கப்போகும் சைட் பிஸ்னஸ் அனைத்துத் தரப்பு மக்களும் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சைட்பிஸ்னஸ்
இந்தச் சைட்பிஸ்னஸ் துவங்க வெறும் 25000 ரூபாய் முதலீடு செய்தால் போது மாதத்திற்கு 3 லட்சம் ரூபாய்க்கு வரையிலான வருமானத்தை ஈட்ட முடியும். வியப்பாக உள்ளதா..? என்ன பிஸ்னஸ்..? எப்படி 3 லட்சம் வரையில் வருமானத்தை ஈட்ட முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்க.
முத்து வளர்ப்பு
முத்து வளர்ப்பின் நம்பமுடியாத லாபகரமான தொழிலாக உள்ளது. முத்து வளர்ப்பின் மூலம் பெரிய அளவில் வெற்றி அடைந்தவர்கள் ஏராளம். முத்துக்களுக்கு உலகம் முழுவதும் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் இந்த வணிகத்தில் ஒவ்வொரு மாதமும் நீங்க முதலீடு செய்த ஆயிரங்கள் லட்சங்களாக மாற்ற முடியும் எனக் கூறப்படுகிறது.
50 சதவீதம் வரை மானியங்கள்
முத்து வளர்ப்பின் முக்கிய அம்சம் என்னவென்றால், இதைத் தொடங்க அரசாங்கம் 50 சதவீதம் வரை மானியங்களை வழங்குகிறது என நியூஸ்18 தெரிவிக்கிறது. மத்திய அரசே இப்பிரிவு வர்த்தகத்தை ஆதரிக்கும் நிலையில் ஏன் முயற்சி செய்யக் கூடாது. முத்து வளர்ப்பு தொழிலை ஊக்குவிப்பதற்காக, மீன்வளத் துறை நீலப்புரட்சி உத்தியின் (Blue Revolution strategy) கீழ் முத்து வளர்ப்பை இணைத்துள்ளது.
நீலப் புரட்சித் திட்டம்
நீலப் புரட்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக மீன்வளத் துறையின் நிதி உதவி பெறும் மாநிலங்களில் முத்து சாகுபடிக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் வலியுறுத்தப்பட்டன. இதனால் முத்து வளர்ப்புக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
குளம்
முத்து வளர்ப்புக்குக் கட்டாயம் ஒரு குளம் தேவை, நீங்கள் அதை உங்கள் சொந்த பணத்திலும் கட்டலாம் அல்லது அரசாங்கத்தின் 50 சதவீத மானியத்தைப் பயன்படுத்திக் கட்டிக்கொள்ள முடியும்.
பயிற்சி திட்டம்
முத்து வளர்ப்பில் பயிற்சித் திட்டத்தை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றில் ஒருவர் தொழில்முறை பயிற்சி திட்டத்தில் சேரவும் அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் முத்து வளர்ப்பில் இருக்கும் முக்கியமான விஷயங்களை வல்லுனர்களிடம் இருந்து தெரிந்துகொள்ள முடியும். இதில் மிகவும் பிரபலமானது CIFA ஆகும்.
வளர்ப்பு முறை
முத்துக்களை வளர்க்க முதலில் மட்டிகளை வலையில் கட்டி, 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு குளத்தில் வைக்க வேண்டும். இதன் மூலம் மட்டிகள் சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும், பின்னர்ச் சிப்பிக் குளத்தில் எடுக்கப்பட்டு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்படும். இதில் ஒவ்வொரு சிப்பியின் உள்ளேயும் ஒரு அச்சுச் சொருகப்படுகிறது. இந்த அச்சு தான் முத்தாக மாறும்.
25000 சிப்பிகள்
ஒரு ஏக்கர் குளத்தில் 25000 சிப்பிகள் வைக்க முடியும், இதன் மூலம் ஒரு ஏக்கர் குளம் மற்றும் சிப்பிகள் வைக்க 8 லட்சம் ரூபாய் வரையில் செலவாகும் எனச் சொல்லப்படுகிறது.
வருடத்திற்கு 30 - 35 லட்சம்
ஒரு சிப்பி 2 முத்துக்கள் வரையில் உருவாக்கும், சந்தையில் ஒரு முத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, முத்தின் தரம் மற்றும் அளவை பொருத்து 200 ரூபாய் வரையில் அதிகரிக்கும். உங்கள் குளத்தில் 50 சதவீதம் சிப்பிகள் நீங்கள் நினைத்தது படி செயல்பாட்டாலே வருடத்திற்கு 30 - 35 லட்சம் வரையில் சம்பாதிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
Disclaimer
Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications