இந்தியாவில் பேமெண்ட்ஸ் மற்றும் பணம் செலுத்தும் சேவைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனம் எபிக்ஸ் கேஷ். இந்நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த எபிக்ஸ் நிறுவனத்தின் நேரடி துணை நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
அதாவது எபிக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் எபிக்ஸ் சிங்கப்பூர், இந்த நிறுவனத்தின் 100 சதவீத துணை நிறுவனம் தான் எபிக்ஸ் கேஷ். அமெரிக்காவில் நாஸ்டாக் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள எபிக்ஸ் நிறுவனத்தின் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் இந்திய வம்சாவளி அமெரிக்க தொழிலதிபரான ராபின் ரெய்னா.

இந்த அமெரிக்க நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து வந்துள்ளது. இந்த சூழ்நிலையில், கடனை திருப்பி செலுத்த முடியாததால், வடக்கு டெக்சாஸ் நீதிமன்றத்தில் திவால் நிலைக்கு எபிக்ஸ் நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது.
எபிக்ஸ் நிறுவனம் அமெரிக்க வங்கிகளிடம் இருந்து வாங்கிய 60 கோடி டாலர் கடனுக்கான நிலுவை தொகையை திருப்ப செலுத்த தவறியதை தொடர்ந்து நீதிமன்றத்தில் திவால் நிலைக்கு தாக்கல் செய்துள்ளது. முன்னதாக கடந்த நவம்பரில், கடன் வசதியை நீட்டிப்பதற்காக அமெரிக்க வங்கிகளுடன் எபிக்ஸ் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தில் எபிக்ஸ் சிங்கப்பூா் நிறுவனமும் உத்தரவாதம் அளித்து இருந்தது. இதனால் எபிக்ஸ் நிறுவனத்தின் திவால் நடவடிக்கையில் எபிக்ஸ் சிங்கப்பூர் நிறுவனமும் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எபிக்ஸ் சிங்கப்பூர் நிறுவனம் திவால் நடவடிக்கையில் சிக்கினால் அதன் இந்திய நிறுவனமான எபிக்ஸ் கேஷ் நிறுவனத்தின் வர்த்தகத்தில் எந்த அளவுக்கு பாதிக்கும் அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் என சரியாக தெரியவில்லை.
2017ல் எபிக்ஸ் நிறுவனம் உள்நாட்டு பணம் அனுப்பும் நிறுவனமான இட்ஸ்கேஷ் நிறுவனத்தை கையகப்படுத்துதல் வாயிலாக இந்திய சந்தையில் களம் கண்டது. அது முதல் 2020 வரை எபிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் பல நிறுவனங்களை கையகப்படுத்துதல் மூலம் தனது வர்த்தக தளத்தை விரிவுப்படுத்தியது. 2022ல் எபிக்ஸ் கேஷ் நிறுவனம் ஐ.பி.ஓ.வில் களமிறங்கி நிதி திரட்ட முயற்சிகள் மேற்கொண்டது. பங்குச் சந்தை அமைப்பிடம் அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தது.
இருப்பினும் எபிக்ஸ் கேஷ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ. முயற்சிகள் வீழ்ச்சி அடைந்தன. எபிக்ஸ் கேஷ் பல விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்பதை கண்டுபிடித்த பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி அந்நிறுவனத்தை கண்டித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் நிறுவனத்தை கையகப்படுத்திய நிகழ்வுகளிலும் எபிக்ஸ் கேஷ் சர்ச்சையை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

படுகொலை செய்யப்பட்ட ஈரான் தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம் ஒத்தி வைப்பு: காரணம் என்ன?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications