இந்திய ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கைக் குழுவின் (MPC) இரு நாள் கூட்டம் ஜூன் 5 முதல் 6 ஆம் தேதிகளில் நடைபெற்று ஜூன் 7 தேதி இக்கூட்டத்தின் முடிவுகளை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட உள்ளார்.
இந்திய மக்கள் வட்டி விகித குறைப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில், அமெரிக்க மத்திய வங்கிக்கு முன்பே ஐரோப்பிய மத்திய வங்கி 5 ஆண்டுகளுக்குப் பின்பு தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் குறைந்துள்ளது.

சர்வதேச மத்திய வங்கிகள் நீண்ட காலமாகப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடுமையான நாணய கொள்கையை அமலாக்கம் செய்துள்ள வேளையில், தற்போது பொருளாதார வளர்ச்சி மற்றும் நுகர்வின் அளவை அதிகரிக்கும் பொருட்டு கடன் பெறுவதற்கான செலவைக் குறைப்பதை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் முதல் சிக்சர்-ஐ, ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) இன்று (ஜூன் 6) அடித்துள்ளது.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கிக்கு முன்னதாகவே ஐரோப்பிய மத்திய வங்கி, தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது. இதன் மூலம், 2022 அக்டோபரில் உயர்த்தப்பட்ட 4% என்ற வரலாற்று உச்ச வட்டி விகிதத்தில் இருந்து 3.75% ஆக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி விகிதக் குறைப்பு, வீட்டுக் கடன் வாங்குபவர்கள், சேமிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் என பலதரப்பட்ட மக்களை பல வகையில் குறறிப்படத்தக்க அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு இந்த வட்டி விகித குறைப்பு சாதகமானது, அதுவே சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு பெரும் இழப்பு.
விலைவாசி உயர்வு குறைந்து வருவதாகவும், பணவீக்க எதிர்பார்ப்புகள் அனைத்து நிலைகளிலும் குறைந்து வருவதாகவும் ஐரோப்பிய மத்திய வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே கடன் வழங்குவதை அதிகரிக்க வட்டி விகிதத்தைத் தளர்த்தி உள்ளது.
இருப்பினும், பணவீக்கம் கட்டுக்குள் வந்துவிட்டதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் 5 வருடத்திற்குப் பின்பு முதல் முறையாகக் குறைக்கப்பட்டு உள்ள இந்த 0.25% வட்டி விகித குறைப்பு பணவீக்கம் முழுமையாகக் கட்டுக்குள் வந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் விரைவான வட்டி விகிதக் குறைப்புக்கள் இருக்க வாய்ப்பில்லை. மேலும் ஐரோப்பிய மத்திய வங்கியை வைத்து அமெரிக்க மத்தி. வங்கி சோதனை செய்ய உள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே மற்றும் பிற அதிகாரிகள், 26 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழு ஜெர்மனி, Frankfurt நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமையகத்தில் கூடி ஆலோசனை செய்து வட்டி விகித குறைப்பை அறிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications