இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புகளைப் பார்க்கும்போது, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையும் காலமும் சரி, இந்தியா மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் காலமும் சரி மிகவும் அதிகமாக இருக்கும் எனத் தனியார் முதலீட்டாளர்கள் கணித்துள்ளனர்.
அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் நோய்த் தொற்றைவிடவும் பசி பட்டினியால் அதிகளவில் இறக்கக் கூடும் நிலையும் உள்ளது. கொரோனாவின் பாதிப்புகள் குறித்து இன்னும் மக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்கப்படவில்லை என்பது தான் தற்போது மிகப்பெரிய பிரச்சனை என்றும் கூறியுள்ளனர்.

சிகோயா கேப்பிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் Shailendra Singh கூறுகையில், இந்திய மக்களுக்குக் கொரோனா குறித்து உண்மையான பாதிப்புகள் இன்னும் தெரியவில்லை, இதே நிலை தொடர்ந்தால் நாட்டில் கொரோனாவால் மக்கள் இறப்பதை விடவும் பசியால் அதிகமானோர் இறப்பது அதிகமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் Shailendra Singh கூறுகையில், நாங்கள் முதலீடு செய்துள்ள நிறுவனங்களிடம் 5 முக்கியக் காரணிகளை வைத்து வர்த்தகத்தை எப்படிக் காப்பாற்றிக்கொள்வது என்பதை இப்போதே திட்டமிடுங்கள் என அறிவுறுத்தியுள்ளோம். நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் அதிர்ச்சி அடையும் அளவிற்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம் தற்போது ஏற்பட்டுள்ள சரிவில் இருந்து மீண்டு வரும் நிலையின் ஆரம்பமே நடப்பு நிதியாண்டில் 3வது அல்லது 4வது காலாண்டில் தான் துவங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டும் அல்லாமல் கொரோனா மீண்டு வந்தாலும், அனைத்து நாடுகளும் உள்நாட்டுத் தேவைக்குத் தான் அதிகளவிலான முக்கியத்துவம் கொடுக்கும், இதனால் சர்வதேச சந்தை தாக்கத்தில் இருந்து பெரிய அளவிலான மாற்றம் இந்தியாவில் ஏற்படாது என்றும் Shailendra Singh கூறியுள்ளார். மேலும் அனைத்து நாடுகளிலும் துவக்கத்தில் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி துறைகள் தான் விரைவில் மீண்டு வரும், அதன் பின்பு தான் சேவை மற்றும் இதர துறைகள்.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications