உலகம் முழுவதும் 2023 ஆம் ஆண்டில் மோசமான பொருளாதார நிலையை எதிர்கொள்ளும் என்ற கணிப்பு பெரும்பாலான வர்த்தகம், முதலீடு, நிதியியல் அமைப்புகள் கூறிவரும் நிலையில் உலக நாடுகள் இதை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.
இதில் முக்கியமாக ஐரோப்பா எதிர்கொள்ள உள்ள சரிவு எடுத்த சில வருடங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இது சர்வதேச பொருளாதாரத்தில் பெரிய ஓட்டையை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்தியா மிகவும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
பொருளாதார மந்தநிலை
2023ல் பொருளாதார மந்தநிலை உலகம் முழுவதும் உருவாகும் எனக் கணிக்கப்பட்டாலும் இந்தியாவின் வளர்ச்சி அளவுகள் தொடர்ந்து சிறப்பாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சர்வதேச சந்தை பாதிப்பால் இந்தியாவில் பல பிரச்சனைகள் கட்டாயம் உருவாகும் அதில் ஒன்று தான் வர்த்தகப் பற்றாக்குறை.
வர்த்தகப் பற்றாக்குறை
சர்வதேச சந்தையில் பொருளாதார மந்தநிலை உருவாகியிருக்கும் நிலையில் இந்தியாவின் ஏற்றுமதி-யில் உணவு பொருட்கள் முதல் டெக்ஸ்டைல் வரையில் அனைத்தும் சரிய உள்ளதால் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கும்.
மத்திய அரசு
இதைச் சரி செய்ய மத்திய அரசு அத்தியாவசியம் அல்லாத இறக்குமதி பொருட்களுக்கும் கூடுதலான இறக்குமதி விதிக்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மத்திய நிதியமைச்சகம் இந்தியாவில் போதுமான உற்பத்தித் திறன் கொண்ட பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதைத் தடுக்கும் விதமாக இறக்குமதி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இறக்குமதி வரி உயர்வு
இதற்காக அனைத்து பிரிவுகளிலும் பெருட்களின் லிஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது, இந்த லிஸ்ட் அத்தியாவசியம் மற்ற பொருட்களுக்கானது மட்டுமே, இதேவேளையில் இந்த வரி உயர்வு HSN குறியீட்டின் கீழ் வரும் பிற பொருட்களுக்கு இல்லை எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
2022-23 பட்ஜெட்
மத்திய அரசு கடைசியாகப் பெரும்பாலான பொருட்கள் மீது இறக்குமதி வரியை அதிகரித்தது 2022-23 பட்ஜெட் திட்டத்தில் தான். அப்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குடைகள், ஹெட்ஃபோன்கள், இயர்போன்கள், ஒலிபெருக்கிகள், ஸ்மார்ட் மீட்டர்கள் மற்றும் போலி நகைகள் போன்ற அன்றாட உபயோகப் பொருட்களுக்கு அதிகப்படியான சுங்க வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
சீனா
இந்தத் தயாரிப்புகளில் பெரும்பாலானவை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன, அவை பெரும்பாலும் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட வடிவிலும் அல்லது உதிரிப்பாகங்கள் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் அசெம்பிள் செய்யப்படும் நாக் டவுன் யூனிட்களாகவோ இருக்கும்.
5 ஆண்டுகள்
கடந்த 5 ஆண்டுகளில் பாதாம், ஆப்பிள் எனப் பல பொருட்களின் மீதான இறக்குமதி வரியை பல முறை உயர்த்தப்பட்டன. மொபைல் போன் உதிரிபாகங்கள் மற்றும் சோலார் பேனல்கள் ஆகியவற்றின் மீது அதிகப்படியான அதிக எண்ணிக்கையில் வரி உயர்த்தப்பட்டது.
அமெரிக்க டாலர் அல்லது யூரோ
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மத்தியிலான வித்தியாசம் தான் வர்த்தகப் பற்றாக்குறை எனக் கூறப்படுகிறது. பொதுவாக இந்தியா பெரும்பாலான இறக்குமதிகளுக்கு இந்தியா அமெரிக்க டாலர் அல்லது யூரோ வாயிலாகப் பேமெண்ட் செலுத்தி வருகிறது.
ரூபாய் மதிப்புப் பாதிப்பு
இந்த நிலையில் நாட்டின் இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகரித்தால் ரூபாய் மதிப்பு பாதித்து நாட்டின் நிதி நிலை தடுமாறும். இந்த நிலையைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது இறக்குமதி பொருட்களுக்கான வரியை குறைக்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications