மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை 2023-24, வளர்ச்சிக்கான புதிய உத்திகளை முன்வைத்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் அனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தின் சப்ளை பக்கத்தில் இருக்கும் தடைகளையும், பிரச்சனைகளையும் சீர்திருத்தும் வண்ணம் இருந்தது. இனிவரும் காலகட்டத்தில், பொருளாதார சீர்திருத்தம் என்பது கீழ்நோக்கிய அதாவது bottom-up அணுகுமுறையுடன் புதிய தலைமுறை சீர்திருத்தங்களாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வலுவாகவும், நிலையாகவும், சமநிலையிலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய வழிவகுக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் அம்ரித் கால் மற்றும் விக்சிட் பாரத் 2047 ஆகியவற்றின் இலக்கை அடைய ஆறு முக்கிய விஷயங்களை அடிப்படையாக வைத்து பொருளாதார ஆய்வறிக்கையில் வளர்ச்சி உத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. இது முதலீட்டு சந்தையை கட்டாயம் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. தனியார் துறையில் மூலதன உருவாக்கம்: தனியார் துறையில் மூலதன உருவாக்கம் இயல்பாக மற்றும் தொடர்ச்சியாக அதிகரிப்பதை உறுதி செய்வது அவசியம். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிலாளர்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கும்.
2. பசுமை மாற்றத்திற்கான நிதி திரட்டுதல்: மின்சாரம் முதல் எரிபொருள் வரையில் பசுமை மாற்றம் அதாவது கிரீன் டிரான்சிஷன்-க்கான நிதி திரட்டலில் தனியார்- பொதுத்துறை கூட்டு முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். இந்தியாவின் பசுமை மாற்ற முயற்சிகளுக்கு போதுமான நிதியை திரட்ட புதுமையான நிதி கருவிகளை கண்டறிய வேண்டியதன் அவசியத்தைப் பொருளாதார ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.
3. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSMEs): MSME களின் வளர்ச்சிக்கு கடன் வழங்குவதில் உள்ள இடைவெளியை அரசு பூர்த்தி செய்ய வேண்டும். MSME நிறுவனங்களுக்கான கடுமையான ஒழுங்குமுறை விதிகள் குறைப்பு, பிசிக்கல் மற்றும் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்துதல், MSME-கள் வர்த்தக சந்தையை விரிவுபடுத்தவும், வளர்ச்சியடையச் செய்யவும் ஏற்றுமதி உத்தியை உருவாக்குதல் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.
4. வேளாண்மை: இந்தியாவின் வளர்ச்சிக்கு வேளாண்மைத் துறை முக்கிய தூணாக உள்ளது. எனவே, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைக்கு உகந்த விவசாயிகளுக்கு ஆதரவான கொள்கைகள் மூலம் வேளாண்மைத் துறையின் வளர்ச்சியையும், அதன் பங்களிப்பையும் உறுதி செய்ய வேண்டும்.
5. திறன் மேம்பாடு: இந்தியர்கள் மத்தியில் உள்ள திறன் இடைவெளியை பூர்த்தி செய்ய, அரசின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு கொள்கைகள், மாணவர்களின் கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய ஒற்றுமை கொள்கை (EU Cohesion Policy) போன்ற உலக அளவிலான அனுபவங்களில் இருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ளலாம் என பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.

6. மாநில அரசின் திறன் மேம்பாடு: மேற்கூறிய அனைத்து உத்திகளும் வெற்றிபெற, இந்தியா தனது மாநிலங்களின் அரசின் திறனை மேம்படுத்த வேண்டும். மாநில அரசின் நிர்வாக புதுப்பித்து, அதன் செயல்திறனை மேம்படுத்த அதில் அதிகப்படியான முதலீடு செய்வது அவசியம் என பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த ஆறு விஷயங்களை செயல்படுத்துவது மூலம் மத்திய அரசின் அம்ரித் கால் மற்றும் விக்சிட் பாரத் 2047 ஆகியவற்றின் இலக்குகளை அடைய முடியும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications