கொல்கத்தா: மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக யூகோ வங்கி செயல்படுகிறது. இதன் தலைமையகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. இதன் தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் செயல்பட்ட சுபோத் குமார் கோயல் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
யூகோ வங்கியின் முன்னாள் தலைவரும் மேலாண் இயக்குனருமான சுபோத் குமார் கோயலை அமலாக்க துறையினர் கைது செய்துள்ளனர். கொல்கத்தாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் கான்கேஸ்ட் ஸ்டீல் & பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு 6200 கோடி ரூபாய் கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் பேரில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் யூகோ வங்கியின் முன்னாள் மேலாண் இயக்குனரான சுபோத் குமார் கோயலை மே 16ஆம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

சுபோத் குமார் கோயல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மே 21 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் கான்கேஸ்ட் ஸ்டீல் & பவர் நிறுவனத்திற்கு கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து சிபிஐ இது தொடர்பான விசாரணையை நடத்தியது. பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இதில் இணைந்து விசாரணை நடத்தினர்.
சுபோத் குமார் கோயல், யூகோ வங்கியின் முன்னாள் தலைவராக செயல்பட்ட போது சிஎஸ்பிஎல் நிறுவனத்திற்கு 6210 கோடி ரூபாயை கடனாக வழங்கியிருக்கிறார். அந்த நிறுவனம் அந்த கடன் தொகையை மோசடியாக வேறு செயல்களுக்கு பயன்படுத்தியிருக்கிறது. அது தெரிந்திருந்த போதும் முறைகேடாக லஞ்சம் பெற்றுக் கொண்டு சுபோத் குமார் கோயல் இந்த பண மோசடிக்கு உதவியதாக சொல்லப்படுகிறது . இதற்காக சுபோத் குமார் கோயல் பணம், சொத்து, ஆடம்பர பொருட்கள் உள்ளிட்டவற்றை பரிசாக பெற்றுள்ளார்.
சிஎஸ்பிஎல் நிறுவனம், தங்களுடைய ஷெல் நிறுவனங்கள் மூலம் சுபோத் குமார் கோயலுக்கு இவற்றை வழங்கியதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் கோயல் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களும் சிஎஸ்பிஎல் நிறுவனம் தங்களுடைய ஷெல் நிறுவனங்கள் வாயிலாக வாங்கி தந்திருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே அமலாக்கத் துறையினர் சிஎஸ்பிஎல் நிறுவனத்தின் தலைவரான சஞ்சய் சுரேகாவை 2024 டிசம்பரில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவருக்கு சொந்தமான 510 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. அமலாக்கத்துறையினர் தற்போது கோயலிடம் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 21ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை காவலை நீட்டிப்பார்களா இல்லையா என்பது அன்றையதினம் தெரிய வரும், மேலும் வழக்கு குறித்த பல விவரங்களும் வெளிவர வாய்ப்புள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications