மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அமலாக்க துறை இயக்குநரகம், இந்தியா - வளைகுடா நாடுகள் மத்தியில் விமான சேவை அளிக்கும் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் வெளிநாட்டு பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களை கோரியுள்ளது.
கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி பரிமாற்றங்கள் குறித்து அமலாக்க துறை விசாரித்து வரும் வேளையில் வெளிநாட்டு பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களை கோரியுள்ளது. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் விதிகளின் கீழ் இந்த ஆவணங்கள் கோரப்பட்டு உள்ளதாக தெரிகிறது. மேலும் அமலாக்க துறையின் விசாரணை மிகவும் துவக்க கட்டத்தில் உள்ளது.

இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாத நிலையில், சில பெயர் வெளியிட விரும்பாத ஊழியர்கள் அமலாக்க துறை ஆவணங்களை கேட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த மாதம் கத்தார் ஏர்வேஸ் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்பட்ட நிலையில் இது தொடர்பாக அமலாக்க துறை ஆவணங்களை கேட்டுள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை. ஜிஎஸ்டி உளவுத்துறையின் இயக்குநர் ஜெனரல் (டிஜிஜிஐ) கடந்த மாதம் கத்தார் ஏர்வேஸ் உள்ளிட்ட வெளிநாட்டு விமான நிறுவனங்களின் அலுவலகங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தங்கள் தலைமை அலுவலகங்களில் இருந்து இந்தியக் கிளைகளுக்கு சேவைகளை இறக்குமதி செய்வதில் செய்யப்பட்ட பேமெண்டில் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்பட்டு ஜிஎஸ்டி உளவுத்துறையின் இயக்குநர் ஜெனரல் கடந்த மாதம் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஒரு வெளிநாட்டு விமான நிறுவனத்தின் தலைமை அலுவலகமும் அதன் இந்தியக் கிளையும் தனித்தனி நிறுவனங்களாகக் கருதப்படுவதாக ஜிஎஸ்டி விதிமுறைகள் கூறுகின்றன. இப்படியிருக்கையில் வெளிநாட்டில் இருக்கும் தலைமை அலுவலகங்களில் இருந்து சேவை, பொருட்களை இறக்குமதி செய்யும் போது அதற்கான வரியை முறையாக செலுத்த வேண்டும்.
மத்திய நிதி அமைச்சகம் அக்டோபர் 18 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2023 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 6,000 போலியான இன்புட் டிாக்ஸ் கிரெடிட் கோரிக்கைகள் மூலம் சுமார் 57,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்ததை DGGI கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக 500 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது.
ஆகஸ்ட் 2022 இல் அறிவிக்கப்படாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்த சில வாரங்களுக்குப் பிறகு வரி ஏய்ப்பு தொடர்பான விவாரணையை தொடர்ந்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications