டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தின் மதுபான ஊழல் தொடர்பான விசாரணையின் அடுத்தகட்டமாக, அமலாக்கத் துறை (ED) கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுமார் ரூ. 205 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக நடந்த விசாரணையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு காலகட்டங்களில் தொடர்புடைய இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை அமலாத்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமலாக்கத்துறை கண்டுபிடித்தது என்ன?: சத்தீஸ்கர் மாநிலத்தில் மதுபான ஊழல் தொடர்பான வழக்கில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அனில் துடேஜாவை அமலாக்கத் துறை கைது செய்தது. தற்போது அந்த வழக்கில் தொடர்புடையவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
அதன்படி துதேஜாவின் ரூ.15.82 கோடி மதிப்புள்ள 14 சொத்துக்களும், ரூ.116.16 கோடி மதிப்புள்ள ராய்ப்பூர் மேயர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான ஐஜாஸ் தேபரின் மூத்த சகோதரரான அன்வர் தேபரின் 115 சொத்துகளும், விகாஷ் அகர்வால் என்ற சுப்புவின் ரூ.1.54 கோடி மதிப்புள்ள 33 சொத்துகளும், அரவிந்த் சிங்கின் ரூ. 12.99 கோடி மதிப்புள்ள சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளள்ளது.
மேலும், இந்திய தொலைத்தொடர்பு சேவை அதிகாரி மற்றும் கலால் துறை சிறப்பு செயலாளர், அருண்பதி திரிபாதிக்கு சொந்தமான ரூ. 1.35 கோடி மதிப்புள்ள சொத்துகளும், மதுபான வியாபாரி திரிலோக சிங் தில்லானுக்கு சொந்தமான ரூ. 28.13 கோடி மதிப்புள்ள சொத்துக்களும், நவீன கேடியாவுக்கு சொந்தமான ரூ.27.96 கோடி மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆஷீஷ் சவுரப் கேடியா வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரூ.1.2 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் மற்றும் நெக்ஸ்ஜென் என்ஜிடெக் பவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தையும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
துதேஜாவின் இதுபோன்ற செயலினால், மது வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சட்டவிரோதமாக 2,100 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துள்ளார். இந்த சட்டவிரோத பணத்தில் ஒரு பெரிய பகுதியை துதேஜாவும் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அரசாங்கத்திற்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறையினர் கூறியுள்ளனர்.
சட்டவிரோதமான இந்த மதுபான ஊழல் 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை நடந்துள்ளது. வரி செலுத்தப்படாத மதுபானங்கள், எவ்வித பதிவும் இன்றி, ரகசியமாக விற்பனை செய்யப்பட்டதால், அரசுக்கு எந்தப் பணமும் வரவில்லை என்று அமலாக்கத்துறையினர் கூறியுள்ளனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications