இன்றைய காலகட்டங்களில் பொதுவாக பெரும் பணக்காரர்களானாலும், புதிய பணக்காரர்களானாலும், செலிபிரிட்டிகள் அந்தஸ்து பெற்ற அனைவரும் குறைந்தது நான்கு ஐந்து ஆடம்பர கார் வைத்திருப்பது வாடிக்கையாகி வருகிறது. தற்போது ஆடம்பர கார்கள் வாங்குவது புதிய ட்ரெண்ட் ஆகியுள்ள நிலையில், புதிய கார்கள் வந்தாலே, பெரும்பாலும், அரசியல்வாதிகள், நடிகர்கள் கோடிகளை கொடுத்து வாங்கி வருகின்றனர். அதேபோல், தமிழ் சினிமா துறைகளில், படம் எடுத்து அந்த படம் வெற்றி பெற்று விட்டால் அந்த படக்குழுவினருக்கு கொடுக்கப்படும் கிஃப்டுகளும் கூட விலையுயர்ந்த சொகுசு கார்கள் தான். அப்படி இருக்கையில், பல கோடிகளை வருமானமாக ஈட்டி வரும் எடல்வைஸ் மியூச்சுவல் ஃபண்டு சிஇஓ ஆன ராதிகா குப்தா இன்று வரை ஒரு சொகுசு கார் கூட சொந்தமாக வாங்கியதில்லையாம். தன்னால் வாங்க முடிந்தும் ஏன் வாங்கவில்லை என்பதற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
ராதிகா குப்தா சமீபத்தில் சொகுசு கார்களை வாங்கும் திறன் இருந்தும் தன்னிடம் ஏன் இல்லை என்பது குறித்து ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளார்.கடந்த இரண்டு தசாப்தங்களாக பணம் அதிகம் சம்பாதித்தும் அதன் மூலம் வளர்ச்சியடைந்ததை பற்றி பேசிய ராதிகா குப்தா, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் கல்லூரியில் பட்டம் பெற்றபோது மக்கள் ஓ! உங்களிடம் ஆடம்பரமான ஹேண்டுபேக் கூட இல்லையா? என்று கேள்வி கேட்டுள்ளதாகவும், அப்போது நான் பாதுகாப்பற்றதாகவும், தலைகுனிவாகவும் கருதியாக கூறியுள்ளார். ஆனால், இப்போது யாராவது சொன்னால் தனக்கு விலையுயர்ந்த கார்கள் பிடிக்கவில்லை என்பதல்ல, ஆனால் அவை தேய்மானம் அடையும் சொத்து எதற்கு என கேட்பதாகவும் கூறியுள்ளார்.

குப்தாவிடம் தற்போது இன்னோவா கார் உள்ளது. நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்து வரும்போது தன்னிடம் ஆடம்பரமான, டிசைனர் பொருட்கள் இல்லாவிட்டால் பாதுகாப்பற்றதாக உணர்ந்ததாகவும், ஆனால் இப்போது, நாட்டின் இளம் தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒருவராக, நிரூபிக்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளார். விலையுயர்ந்த ஆடம்பர பொருட்களை வாங்குவதன் மூலம் மற்றவர்களுக்கு தனது மதிப்பை காண்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என கூறியுள்ளார்.
ஒவ்வொரு முறையும் நான் 'போனஸ் பெறுவேன். ஆடம்பரமான கார் வாங்க முடியும். ஆனால் நான் நினைக்கிறேன் கார் ஒரு தேய்மான சொத்து நான் ஓட்டுவதில்லை, அதை வீட்டை விட்டு வெளியே எடுத்தாலே தேய்மானத்துடன் 30 சதவீதம் மதிப்பு போய்விடும் என்று தனக்குள்ளே கூறிகொள்வதாக தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக பணத்துடனான தனது உறவைப் பற்றி மேலும் விவரித்த அவர், பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் கல்லூரியில் பட்டம் பெற்றபோது, மக்கள் தன்னிடம் ஓ! உங்களிடம் ஆடம்பரமான கைப்பை இல்லையா? என கேட்டதாகவும், இப்போது, ஏன் இன்னோவா ஓட்டுகிறீர்கள்? கேட்பதாகவும், அவர்களிடம் மை ப்ளேஸ் மை லைஃப் என்று நான் சொல்லக்கூடிய கட்டத்தில் இருப்பதாகவும், மற்றவர்களிடம் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, எடல்வைஸ் சிஇஓ ராதிகா குப்தாவின் நிகர சொத்து மதிப்பு சுமார் 41 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications