2026 மத்திய பட்ஜெட்: கல்வி தரத்தை உயர்த்தவும், ஏஐ கற்றலை அதிகரிக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா?

மத்திய பட்ஜெட் 2026 நெருங்கும் நிலையில், கல்வியாளர்கள் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதை விட, கல்வித் தரம், உட்கட்டமைப்பு மற்றும் எதிர்காலத் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் இளம் மக்கள்தொகை மற்றும் வளர்ந்து வரும் உயர்கல்வி அமைப்பைக் கருத்தில் கொண்டு இந்த வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டுள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய கல்வி அமைப்பான இந்தியாவில், 25 வயதுக்குட்பட்டோர் கிட்டத்தட்ட 40% பேர் உள்ளனர். கடந்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.1.28 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது (6.22% அதிகம்), இதில் ரூ 50,077.95 கோடி உயர்கல்விக்குச் சென்றது. 2024-25 பொருளாதார ஆய்வறிக்கையின்படி, எட்டு ஆண்டுகளில் உயர்கல்வி நிறுவனங்கள் 13.8% அதிகரித்துள்ளன; மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 23.7% லிருந்து 28.4% ஆக உயர்ந்தது.

2026 மத்திய பட்ஜெட்: கல்வி தரத்தை உயர்த்தவும், ஏஐ கற்றலை அதிகரிக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா?

இந்திய சுகாதார மேலாண்மை ஆராய்ச்சி நிறுவன (IIHMR) பல்கலைக்கழகத் தலைவர் டாக்டர் பி.ஆர். சோடானி, மனிதவள மேம்பாட்டிற்கு கல்வி மற்றும் சுகாதாரத்தில் அதிக பொது முதலீடு அவசியம் என்கிறார். அவர், "திறமையானவர்களை உருவாக்குதல், டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிறுவன திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்," எனக் குறிப்பிட்டார்.

பட்ஜெட் 2026, அடிப்படைக் கட்டமைப்பு, டிஜிட்டல் மற்றும் பலமொழி கல்வியை வலுப்படுத்தி, அறிவு சார்ந்த பொருளாதாரத்திற்கு மாணவர்களைத் தயார்படுத்தினால் ஒரு திருப்புமுனையாக அமையும் என டாக்டர் சோடானி நம்பிக்கை தெரிவித்தார்.

BIMTECH துணை இயக்குநர் பங்கஜ் பிரியா கூறுகையில், "கல்விக்கான அணுகல் அதிகரித்துள்ள போதிலும், ஆய்வகங்கள், விடுதிகள் மற்றும் மாணவர் வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு மாணவர் சேர்க்கை வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கவில்லை" என்கிறார். பட்ஜெட் 2026 திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

"அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள், அணுகலை விரிவுபடுத்துவதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், தரம், வலுவான ஆராய்ச்சி திறன் மற்றும் சிறந்த வேலைவாய்ப்பு விளைவுகளை நோக்கி நகர வேண்டும்," எனவும் பிரியா தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி, புத்தாக்க ஏஐ (generative AI) மற்றும் இயந்திர கற்றல் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் பாடத்திட்டங்களை சீரமைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது ஏஐ அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்ட நிலையில் அடிப்படை கல்வியிலேயே ஏஐ கற்றலை புகுத்துவதற்கு அரசு முக்கியத்துவம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் கல்லூரி படிப்பை முடிக்கும் இளைஞர்களிடம் வேலைவாய்ப்புக்கு ஏற்ற திறன்கள் இல்லாமல் இருக்கிறது என்பது தான் நிறுவனங்களின் பெரிய புகாராக இருக்கிறது. அதனை ஈடு கட்டும் வகையில் அரசு மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+