டெல்லி: தேர்தல் காரணமாகப் பல வர்த்தக துறை பாதிப்படைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது, தேர்தல் கட்டுப்பாடுகள் காரணமாக ரொக்கப்பணம் புழக்கம் நாடு முழுவதும் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்குவது முதல் கார் வாங்குவது வரையில் பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக கார் விற்பனை சூடுபிடித்திருந்த வேளையில், இந்திய சந்தையில் தற்போது தேவை குறைந்து வருகிறது. இதன் காரணமாக, மே மாத இறுதிக்குள் 4 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் கையிருப்பில் இருக்கும் என கார் உற்பத்தியாளர்கள் கணித்துள்ளனர்.

இந்த 4 லட்சம் வாகனங்களின் மதிப்பு ரூ.44,000 கோடி எனக் கணிக்கப்பட்டுள்ளது, தற்போது சந்தையில் இருக்கும் கார்களின் சராசரி மதிப்பு 11 லட்சமாகும். தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான பின்பு, வர்த்தக சந்தை சீரான பின்பு தான் இந்த கார்களின் உண்மையான நிலை தெரியவரும் எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
கார் டீலர்களுக்கு, கார் தொழிற்சாலையிலிருந்து வாகன விநியோகம் தேவைக்கும் அதிகமாக வருவதால் இந்த பிரச்சனை தலையை மீறி சென்றுள்ளது. வாகன விற்பனையைக் குறிக்கும் பயணிகள் வாகனப் பதிவுகள், கடந்த ஆண்டை விட மே மாதத்தில் 5% வரை குறைய வாய்ப்புள்ளது. இந்த ஆண்டில் இது இரண்டாவது சரிவாகும்.
பொதுத் தேர்தல் முடிவுகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மை, திருமண சீசன் முடிவடைந்தாலும், டெல்லி NCR உட்பட பல முக்கிய சந்தைகளில் வெப்ப அலைகள் அதிகரித்துள்ள காரணங்களால் கார் விற்பனை பெரிய அளவில் சரிந்துள்ளது. இதனால் கார் விற்பனை சரிவுக்கு பொதுத் தேர்தல் மட்டும் காரணமில்லை.
கார் உற்பத்தியாளர்கள் மே மாத இறுதிக்குள் 340,000 - 350,000 வாகனங்களை டீலர்களுக்கு டெலிவரி செய்யும் என எதிர்பார்க்கின்றனர். இது கடந்த ஆண்டை விட 4-4.5% அதிகமாகும். அளவுக்கு அதிகமாக தேக்கத்தில் உள்ள கார்கள் குறித்து டீலர்கள் பேசுகையில், சில நிறுவனங்கள் திட்டமிட்டு உற்பத்தி நிறுத்தி, உற்பத்தி அளவைக் குறைத்துள்ளது. இதன் மூலம் கையிருப்பில் இருக்கும் கார்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்துவதற்கு உதவியுள்ளது, ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் இதை செய்யவில்லை என்று கூறுகின்றனர்.
கியா இந்தியாவின் தேசிய விற்பனைத் தலைவர் ஹர்தீப் சிங் பிரார் கூறுகையில், புதிய அரசு பதவியேற்ற பிறகு கார் விற்பனை மீண்டும் அதிகரிக்கும் என்று அவர் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பருவமழைக்கான கணிப்பு சாதகமாக உள்ளது, நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் காரணத்தால் வட்டி விகிதங்கள் இந்த ஆண்டு இறுதியில் குறைய வாய்ப்புள்ளது என ஹர்தீப் சிங் பிரார் கூறுகிறார்.
மே மாதத்தில் கார் பதிவுகள் தொடர்ச்சியாக 10% வரை குறைய வாய்ப்புள்ளதாக பிரார் கணித்துள்ளார், இருப்பினும் புதிய மாடல் அறிமுகம் செய்யும் காரணத்தால் இந்த ஆண்டு விற்பனையிலும் வளர்ச்சியைக் காணும் என அறிவித்துள்ளார்.
இதேபோல் இருப்பு அதிகமாக இருக்கும் காரணத்தால் கார் உற்பத்தி நிறுவனங்கள் தள்ளுபடி அளிக்குமா என்ற கேள்வியும் எழும் வேளையில், சந்தையில் ஏற்கனவே போட்டியின் காரணமாக விலைகள் கட்டுப்படுத்தி இருக்கும் வேளையில் தள்ளுபடிக்கு வாய்ப்பு குறைவு என ஹர்தீப் சிங் பிரார் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications