பொது தேர்தல் முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வேளையில், இந்த நாளில் வாக்கு எண்ணிக்கை எப்படி துவங்கும்..? யாரெல்லாம் வாக்கு எண்ணும் இடத்தில் இருப்பார்கள்..? வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் எப்படி இருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இதை கண்முன் கொண்டும் வரும் செய்தி தான் இது.
தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் அல்லது பிரதிநிதிகள் முன்னிலையில் காலை 7 மணியளவில் ஸ்டிராங் ரூம் திறக்கப்படும். ஸ்டிராங் ரூம் என்பது தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து EVM இயந்திரங்களை 24X7 பாதுகாப்புடன் வைக்கப்படும் அறை.

இந்த ஸ்டிராங் ரூம்-ஐ திறக்கப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும், இந்த தருணத்தில் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புப் பார்வையாளரும் உடன் இருப்பார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் (EVM) கன்ட்ரோல் யூனிட்-ஐ வாக்கு எண்ணும் மேசைக்கு கொண்டு வருவதன் மூலம் வாக்கு எண்ணிக்கை செயல்முறை தொடங்குகிறது.
சிசிடிவி கேமராக்கள் வாயிலாக வாக்கு எண்ணிக்கையின் முழு செயல்பாட்டையும் கண்காணித்து வீடியோவில் பதிவு செய்கின்றன. ஒவ்வொரு கன்ட்ரோல் யூனிட்-ம் தனிப்பட்ட ID மற்றும் சீல் பொருத்தப்பட்டு இருக்கும், இதை வேட்பாளரின் வாக்குச் சாவடி முகவருக்கும் (polling agent) காட்டப்படும். அதன் பின்னர், கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள பட்டனை அழுத்துவதன் மூலம், ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குகள் EVM திரையில் தோன்றத் தொடங்கும்.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 15 மேசைகள் இருக்கும், இதில் 14 மேஜைகள் வாக்கு எண்ணிக்கைக்கும், ஒரு மேஜை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ஒதுக்கப்படும். வாக்கு எண்ணப்படும் நாளன்று காலையில் ஒவ்வொரு மேசைக்கும் வாக்கு எண்ணும் ஊழியர்களை மாவட்டத் தேர்தல் அதிகாரி நியமிப்பார்.
தேர்தல் கமிஷன் விதிகளின்படி, ஒவ்வொரு வேட்பாளருக்கும் நியமிக்கப்பட்ட முகவர், வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஒவ்வொரு மேஜையிலும் இருப்பார். இதேபோல் வாக்கு எண்ணும் மையத்தில் 15 முகவர்களுக்கு மேல் அனுமதி இல்லை. ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் முகவரைத் தேர்ந்தெடுத்து, முகவரின் பெயர், புகைப்படம் மற்றும் ஆதார் அட்டையை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிப்பார்கள்.
வாக்கு எண்ணும் ஊழியர்கள், தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை, எந்த வேட்பாளரின் முகவரும் வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை, வாக்கு எண்ணிக்கை பணியில் இருப்பவர்களைத் தவிர வேறு யாரும் மொபைல் சாதனத்தை உள்ளே கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வாக்கு எண்ணிக்கையில் முகவர்கள் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளது என சந்தேகம் எழுந்தால், அவர்கள் மறு எண்ணிக்கை செய்யக் கோரலாம், ஆனால் மறு எண்ணிக்கை முடிவுகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகுதான் நடக்கும்.
மேலும் வாக்குகள் எண்ணப்பட்டதும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திரும்பவும் ஸ்டிராங் ரூம்-க்கு திரும்பும். தேர்தல் விதிகளின்படி, அதிகாரப்பூர்வமாக மறு எண்ணுக்கு உத்தரவிடப்பட்டால், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு 45 நாட்களுக்கு EVMகள் ஸ்டிராங் ரூம்-ல் இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுகின்றன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications