இந்திய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தேர்தல் பத்திரங்கள் மூலம் அடுத்த பிரச்சனை வெடித்துள்ளது. இந்த முறை தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நிறுவனங்களுக்கும், வருமான வரி துறைக்கும் பிரச்சனை உருவெடுத்துள்ள வேளையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் முக்கியமான முடிவுடன் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கிறது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்த 1300 நிறுவனங்கள், அந்த நன்கொடை தொகைக்கான வரி சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு வரி செலுத்தியிருக்கும் வேளையில் மத்திய வருமான வரித்துறை வரி சலுகை குறித்து நிறுவனத்திடம் கேள்வி கேட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தது தான் தற்போதைய பிரச்சனைக்கு முக்கியமான காரணம். மத்திய வருமான வரித்துறை தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடைக்கு வரி பிடித்தம் செய்து வரி செலுத்தியுள்ளது தொடர்பாக சில நிறுவனங்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மத்திய அரசின் தேர்தல் பத்திரங்கள் வாங்கிய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்த முக்கிய நிறுவனங்கள் பட்டியலில், இன்ஃபோசிஸ், எம்பஸி குழுமம், மேகா இன்ஜினியரிங், ஆதித்ய பிர்லா குழுமம், JSW ஸ்டீல், டோரென்ட் பார்மா, லூப்பின், இண்டாஸ், பார்தி ஏர்டெல் மற்றும் அலெம்பிக் ஃபார்மாஸ்யூட்டிகல்ஸ் லிமிடெட் என பல பிரபலமான நிறுவனங்கள் அடங்கும்.
2018 ஆம் ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது என தீர்ப்பளித்து, இத்திட்டத்தை இனி பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்தது. இந்த தேர்தல் பத்திர திட்டம் மூலம் 2018 முதல் 2024 வரை அரசியல் கட்சிகளுக்கு ரூ.16,518 கோடி நிதி திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது வருமான வரித்துறை இத்தொகை குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது தொடர்பான விபரத்தை இந்திய தொழில் துறை அமைப்புகள், மத்திய நிதி அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் வரவிருக்கும் பட்ஜெட்டில் இப்பிரச்சனைக்கான தீர்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி விதிமுறைகள்: பொதுவாக, அரசியல் கட்சிகளுக்கும், எலகட்ரல் டிரஸ்ட் அமைப்புகளுக்கும் அளிக்கப்படும் நன்கொடைக்கு, வருமான வரிச் சட்டம் 1961ன் பிரிவு 80GGB மற்றும் 80GGC களின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆனால், 2018 ஆம் ஆண்டில் தேர்தல் பத்திர திட்டம் அறிமுகம் செய்த பின்னர், 2018 மூலமாகவே நன்கொடை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட நன்கொடைகள், வருமான வரிச் சட்டம் 1961ன் பிரிவு 13A கீழ் வரி விலக்கு பெற்றிருந்தன.
தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து வரி சலுகை தொடர்ந்து அளிக்கப்படுவதில் வருமான வரித்துறைக்கு குழப்பம் ஏற்பட்டு, வரி சலுகை பெற்ற நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கான தீர்வை மத்திய நிதியமைச்சகம் பட்ஜெட்டில் அறிவிக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications